ஆஸ்கர் விருது - நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் |

'பாகுபலி' படத்திற்குப் பிறகு தெலுங்கு நடிகரான பிரபாஸ் பான் இந்தியா நடிகராக மாறினார். அதற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த 'சாஹோ, ராதேஷ்யாம்' ஆகியவை தோல்வியைத் தழுவினாலும் பிரபாஸுக்கு பிரம்மாண்ட படங்களின் வாய்ப்பு வந்து கொண்டுதான் இருக்கிறது.
தற்போது பிரம்மாண்டப் படங்களான 'ஆதி புருஷ், சலார், புராஜக்ட் கே' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் 'ஆதி புருஷ்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால், அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மாருதி இந்தப் படத்தை இயக்குகிறாராம். நிதி அகர்வால், மாளவிகா மோகனன் கதாநாயகிகளாக ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல். வில்லனாக நடிக்க ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்திடம் பேசி வருகிறார்களாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்தமாதக் கடைசியில் அல்லது அடுத்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகலாம் என்கிறார்கள்.




