காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் |

'பாகுபலி' படத்திற்குப் பிறகு தெலுங்கு நடிகரான பிரபாஸ் பான் இந்தியா நடிகராக மாறினார். அதற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த 'சாஹோ, ராதேஷ்யாம்' ஆகியவை தோல்வியைத் தழுவினாலும் பிரபாஸுக்கு பிரம்மாண்ட படங்களின் வாய்ப்பு வந்து கொண்டுதான் இருக்கிறது.
தற்போது பிரம்மாண்டப் படங்களான 'ஆதி புருஷ், சலார், புராஜக்ட் கே' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் 'ஆதி புருஷ்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால், அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மாருதி இந்தப் படத்தை இயக்குகிறாராம். நிதி அகர்வால், மாளவிகா மோகனன் கதாநாயகிகளாக ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல். வில்லனாக நடிக்க ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்திடம் பேசி வருகிறார்களாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்தமாதக் கடைசியில் அல்லது அடுத்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகலாம் என்கிறார்கள்.




