சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை இரண்டு பாகங்களாக இயக்கி இருக்கிறார் மணிரத்னம். இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வந்தது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உட்பட பலர் நடித்திருந்த இந்த படம் இன்று(நவ., 18) 50வது நாளை எட்டி உள்ளது. அதோடு உலகளவில் இந்த படம் 500 கோடி வசூலை எட்டி உள்ளது. இதை படக்குழுவினர் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முதல் பாகத்துக்கு கிடைத்த அதே வரவேற்பு இரண்டாம் பாகத்துக்கும் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதல் பாகத்தை படமாக்கிய போதே இரண்டாம் பாகத்திற்கான அனைத்து காட்சிகளையும் படமாக்கி விட்டார் மணிரத்னம். இந்த நிலையில் தற்போது இரண்டாம் பாகத்துக்கான டப்பிங், கிராபிக்ஸ், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.