பட்டங்கள் வாழ்க்கைக்கு உதவுவதில்லை : ராஷ்மிகா | ஷங்கர் இயக்கத்தில் துருவ் விக்ரம்? | கேங்கர்ஸ் படத்தில் ஜந்து கெட்டப்பில் வடிவேலு! | பிளாஷ்பேக்: டைட்டில் பிரச்னை காரணமாக சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய ஸ்ரீதேவி | தவறுகள் செய்ய சல்மான் கான் பயப்பட மாட்டார் ; இயக்குனர் சூரஜ் பார்ஜாத்யா ஓபன் டாக் | மோகன்லாலின் எம்புரான் படத்தால் மீண்டும் தள்ளிப்போகிறது வீரதீரசூரன் ரிலீஸ் | லிப்லாக் காட்சியில் நடிக்க பிரதீப் ரங்கநாதனை வலியுறுத்திய இயக்குனர்கள் | காதலர் தினத்தில் காதலரை அறிமுகம் செய்த பிக்பாஸ் ஜாக்குலின் | மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளர் போர்க்கொடி ; கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு வலுக்கும் எதிர்ப்பு | எல்லோருக்குள்ளும் இதயம் முரளி இருக்கிறார்: அதர்வா நெகிழ்ச்சி |
கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கில் சிரஞ்சீவி, சல்மான்கான் நடிப்பில் வெளியான காட்பாதர் திரைப்படம் வெற்றியை பெற்றுள்ளது. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் லூசிபர் என்கிற பெயரில் வெளியான இந்த படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி அழகாக ரீமேக் செய்து இயக்கியுள்ளார் இயக்குனர் மோகன்ராஜா. இதனால் தெலுங்கு திரையுலகில் மோகன்ராஜாவுக்கு மவுசு அதிகரித்து இருப்பதுடன். ரசிகர்களும் அவரை புகழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்ததாக ராம்சரண் நடிக்கும் படத்தையும் மோகன்ராஜா இயக்கவுள்ளார் என்கிற செய்தி சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்ராஜா இயக்கிய தனி ஒருவன் திரைப்படம் தெலுங்கில் ராம்சரண் நடிக்க துருவா என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த படத்தை இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கியிருந்தார். தமிழ் அளவுக்கு மிகப்பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் டீசன்டான வெற்றியை அந்த படம் பெற்றது.
இந்த நிலையில் தற்போது காட்பாதர் படத்தின் வெற்றியை தொடர்ந்து துருவா இரண்டாம் பாகத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது. காட்பாதர் பட தயாரிப்பாளர்களில் ஒருவரான என்.வி.பிரசாத் இந்த இரண்டாம் பாகம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.