நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கில் சிரஞ்சீவி, சல்மான்கான் நடிப்பில் வெளியான காட்பாதர் திரைப்படம் வெற்றியை பெற்றுள்ளது. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் லூசிபர் என்கிற பெயரில் வெளியான இந்த படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி அழகாக ரீமேக் செய்து இயக்கியுள்ளார் இயக்குனர் மோகன்ராஜா. இதனால் தெலுங்கு திரையுலகில் மோகன்ராஜாவுக்கு மவுசு அதிகரித்து இருப்பதுடன். ரசிகர்களும் அவரை புகழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்ததாக ராம்சரண் நடிக்கும் படத்தையும் மோகன்ராஜா இயக்கவுள்ளார் என்கிற செய்தி சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்ராஜா இயக்கிய தனி ஒருவன் திரைப்படம் தெலுங்கில் ராம்சரண் நடிக்க துருவா என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த படத்தை இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கியிருந்தார். தமிழ் அளவுக்கு மிகப்பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் டீசன்டான வெற்றியை அந்த படம் பெற்றது.
இந்த நிலையில் தற்போது காட்பாதர் படத்தின் வெற்றியை தொடர்ந்து துருவா இரண்டாம் பாகத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது. காட்பாதர் பட தயாரிப்பாளர்களில் ஒருவரான என்.வி.பிரசாத் இந்த இரண்டாம் பாகம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.