டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ |
தமிழ் சினிமா உலகில் 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமானவர்கள் இயக்குனர் ராஜா, ஜெயம் ரவி. அண்ணன், தம்பிகளான இவர்கள் பல படங்களுக்கு எடிட்டிராகப் பணியாற்றிய மோகனின் மகன்கள் ஆவர். அண்ணன், தம்பி இருவரும் இணைந்து சில வெற்றிப் படங்களைத் தமிழில் கொடுத்திருக்கிறார்கள்.
ராஜா பின்னர் தன் பெயருடன் அப்பா மோகன் பெயரைச் சேர்த்துக் கொண்டு மோகன் ராஜா ஆகிவிட்டார். சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்ற ராஜா தெலுங்குப் படமான 'அனுமன் ஜங்ஷன்' மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்தப் படத்திற்குப் பிறகு எட்டு தமிழ்ப் படங்களை இயக்கி முடித்த ராஜா மீண்டும் இயக்கிய தெலுங்குப் படமான 'காட்பாதர்' சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. இப்படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
ஜெயம் ரவி நடித்த 'பொன்னியின் செல்வன்' படம் கடந்த வாரம் வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தங்களது மகன்களில் இரண்டு படங்களின் போஸ்டர்கள் முன்பும் நின்று கொண்டு அவர்களது பெற்றோர் மோகன், வரலட்சுமி ஆகியோர் புகைப்படும் எடுத்து மகிழ்ச்சியடைந்துள்ளனர். அந்த புகைப்படத்தைப் பகிர்ந்து 'பெருமையான பெற்றோர்' என மோகன்ராஜா பதிவு செய்துள்ளார். அதை ஜெயம் ரவியும் ரிடுவீட் செய்துள்ளார்.