தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது | வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? |

தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த், சிம்ரன், யோகி பாபு, ஊர்வசி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'அந்தகன்'. அப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நேற்று படத்தின் சக்சஸ் மீட் ஒன்றை நடத்தினார்கள்.
அப்போது பேசிய படத்தின் இயக்குனர் தியாகராஜன், “முதலில் இந்தத் திரைப்படத்தை தனிஒருவன் படத்தை இயக்கிய மோகன்ராஜா இயக்குவதாக இருந்தது. அவருடன் மூன்று மாதம் இணைந்து பயணித்தோம். அந்த மூன்று மாத காலத்திற்குள் அவர் லண்டனில் உள்ள வெளிநாட்டு நடிகை ஒருவர் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று சொன்னார். அவருடனும் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர் கேட்ட சம்பளத்தையும் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டோம். மூன்று மாதத்திற்குப் பிறகு மோகன்ராஜாவிற்கு சிரஞ்சீவி நடிக்கும் படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது, சிரஞ்சீவி உடனான படத்தை இயக்கி நிறைவு செய்த பிறகு இந்தப் படத்தில் பணியாற்றுகிறேன் என சொன்னார். நான் நன்றி என்று சொல்லிவிட்டு, உங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக தொடருங்கள் என்றேன். அதன் பிறகு நான் இயக்கத் தீர்மானித்தேன். அந்த கதாபாத்திரத்திற்கு யாரை நடிக்க வைப்பது என்பது குறித்து யோசிக்கத் தொடங்கினோம். அப்போது சிம்ரனைத் தவிர வேறு யாரும் என் எண்ணத்தில் வரவில்லை. அவரும் நடிக்க ஒப்புக்கொண்டு பெரிய அளவில் பேராதரவை வழங்கினார்,” என்றார்.
'அந்தகன்' படத்தை இயக்குவதைவிட்டு மோகன்ராஜா இயக்கச் சென்ற தெலுங்குப் படம் சிரஞ்சீவி நடித்து வெளிவந்த 'காட்பாதர்' படம். ஆனால், அப்படம் தெலுங்கில் தோல்வியைத் தழுவியது. மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்த 'லூசிபர்' படத்தின் தெலுங்கு ரீமேக் தான் 'காட்பாதர்'. அந்தப் படத்திற்குப் பின் மோகன்ராஜா இயக்கத்தில் இன்னும் எந்தப் படமும் வரவில்லை. ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க உள்ள 'தனி ஒருவன் 2' படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை தற்போது செய்து வருகிறார் மோகன் ராஜா.