சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

பெரும்பாலும் பிரபல நடிகர்களின் வாரிசுகள் பெற்றோரை போலவே தாங்களும் நடிகராக களம் இறங்கி வரும் வேளையில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் மட்டும் இதிலிருந்து விலகி தனது தாத்தா எஸ் ஏ சந்திரசேகரை போல இயக்குனராக மாறியுள்ளார். வெளிநாடு சென்று இதற்கான படிப்பை படித்துவிட்டு வந்த ஜேசன் சஞ்சய் தற்போது லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படம் ஒன்றை இயக்கும் முன்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க இவரது தாத்தா இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவ்வப்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார்.
அதே சமயம் வயதானாலும் கூட தற்போதும் டைரக்ஷன் மீதான ஆர்வம் குறையாமல் 'கூரன்' என்கிற படத்தை தற்போது இயக்கி வருகிறாராம் எஸ் ஏ சந்திரசேகர். அவரது ஆரம்பகால படங்களில் அதிகம் இடம் பெற்று நடித்த நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன் எஸ்.ஏ.சி படம் இயக்கும் தகவலையும் தற்போது தெரியப்படுத்தியுள்ளார். அந்த வகையில் ஒரே நேரத்தில் திரை உலகில் தாத்தாவும் பேரனும் படம் இயக்குகிறார்கள் என்பது அதிசயமான ஒன்றுதான்.




