ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
பெரும்பாலும் பிரபல நடிகர்களின் வாரிசுகள் பெற்றோரை போலவே தாங்களும் நடிகராக களம் இறங்கி வரும் வேளையில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் மட்டும் இதிலிருந்து விலகி தனது தாத்தா எஸ் ஏ சந்திரசேகரை போல இயக்குனராக மாறியுள்ளார். வெளிநாடு சென்று இதற்கான படிப்பை படித்துவிட்டு வந்த ஜேசன் சஞ்சய் தற்போது லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படம் ஒன்றை இயக்கும் முன்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க இவரது தாத்தா இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவ்வப்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார்.
அதே சமயம் வயதானாலும் கூட தற்போதும் டைரக்ஷன் மீதான ஆர்வம் குறையாமல் 'கூரன்' என்கிற படத்தை தற்போது இயக்கி வருகிறாராம் எஸ் ஏ சந்திரசேகர். அவரது ஆரம்பகால படங்களில் அதிகம் இடம் பெற்று நடித்த நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன் எஸ்.ஏ.சி படம் இயக்கும் தகவலையும் தற்போது தெரியப்படுத்தியுள்ளார். அந்த வகையில் ஒரே நேரத்தில் திரை உலகில் தாத்தாவும் பேரனும் படம் இயக்குகிறார்கள் என்பது அதிசயமான ஒன்றுதான்.