மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
பெரும்பாலும் பிரபல நடிகர்களின் வாரிசுகள் பெற்றோரை போலவே தாங்களும் நடிகராக களம் இறங்கி வரும் வேளையில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் மட்டும் இதிலிருந்து விலகி தனது தாத்தா எஸ் ஏ சந்திரசேகரை போல இயக்குனராக மாறியுள்ளார். வெளிநாடு சென்று இதற்கான படிப்பை படித்துவிட்டு வந்த ஜேசன் சஞ்சய் தற்போது லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படம் ஒன்றை இயக்கும் முன்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க இவரது தாத்தா இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவ்வப்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார்.
அதே சமயம் வயதானாலும் கூட தற்போதும் டைரக்ஷன் மீதான ஆர்வம் குறையாமல் 'கூரன்' என்கிற படத்தை தற்போது இயக்கி வருகிறாராம் எஸ் ஏ சந்திரசேகர். அவரது ஆரம்பகால படங்களில் அதிகம் இடம் பெற்று நடித்த நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன் எஸ்.ஏ.சி படம் இயக்கும் தகவலையும் தற்போது தெரியப்படுத்தியுள்ளார். அந்த வகையில் ஒரே நேரத்தில் திரை உலகில் தாத்தாவும் பேரனும் படம் இயக்குகிறார்கள் என்பது அதிசயமான ஒன்றுதான்.