ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா | தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் | சயின்ஸ் பிக்சன் படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த குஞ்சாக்கோ-மஞ்சு வாரியர் | தனக்கு விருது வாங்கித் தந்த படத்தை 4 வருடமாகியும் பார்க்கத் தயங்கும் ரேவதி | அறிமுகப் படம் வெளியாகும் முன்பே அடுத்த வாய்ப்பு பெற்ற சிவகுமார் முருகேசன் | 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடை | மோகன்லால் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பிரியதர்ஷன் | சிரஞ்சீவிக்கு முதல் திருமண அழைப்பிதழ் வைத்த அல்லு சிரிஷ் | 10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது |

தெலுங்கில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா. இருவரும் இணைந்து தெலுங்கில் 'கீதா கோவிந்தம், டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்கள். ராஷ்மிகாவுக்கு கன்னட நடிகரான ரக்ஷித் ஷெட்டியுடன் 2017ம் ஆண்டிலேயே திருமண நிச்சயம் நடந்தது. ஒரு வருடம் கழித்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவை கைவிட்டனர்.
அதன்பின்னர் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா பற்றிய காதல் கிசுகிசுக்கள் அடிக்கடி தெலுங்கு திரையுலகத்திலும், மீடியாக்களிலும் வெளிவரும். ஆனால், இருவருமே அதை மறுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று மும்பையிலிருந்து அடுத்தடுத்து இருவரும் மாலத்தீவிற்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ராஷ்மிகா ஹிந்தியில் அறிமுகமாகியுள்ள 'குட் பை' படம் நேற்று வெளியானது. படத்தின் பிரமோஷன்களை முடித்துவிட்டதாலும், தொடர்ந்து படங்களில் நடித்து வந்தததாலும் ஓய்விற்காக ராஷ்மிகா மாலத் தீவு சென்றுள்ளாராம். அவருடன் விஜய்யும் சென்றுள்ளதால் இருவரும் காதலிப்பது உறுதியாகியுள்ளது என்கிறார்கள்.
மாலத் தீவு செல்லும் நட்சத்திரங்கள் விதவிதமான புகைப்படங்களைப் பதிவிடுவது வழக்கம். ராஷ்மிகாவும், விஜய்யும் அப்படி ஜோடியாக ஏதாவது புகைப்படங்களைப் பதிவிட்டால் தான் அவர்களுக்குள் காதல் இருப்பது தெரிய வரும்.




