என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
தெலுங்கில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா. இருவரும் இணைந்து தெலுங்கில் 'கீதா கோவிந்தம், டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்கள். ராஷ்மிகாவுக்கு கன்னட நடிகரான ரக்ஷித் ஷெட்டியுடன் 2017ம் ஆண்டிலேயே திருமண நிச்சயம் நடந்தது. ஒரு வருடம் கழித்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவை கைவிட்டனர்.
அதன்பின்னர் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா பற்றிய காதல் கிசுகிசுக்கள் அடிக்கடி தெலுங்கு திரையுலகத்திலும், மீடியாக்களிலும் வெளிவரும். ஆனால், இருவருமே அதை மறுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று மும்பையிலிருந்து அடுத்தடுத்து இருவரும் மாலத்தீவிற்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ராஷ்மிகா ஹிந்தியில் அறிமுகமாகியுள்ள 'குட் பை' படம் நேற்று வெளியானது. படத்தின் பிரமோஷன்களை முடித்துவிட்டதாலும், தொடர்ந்து படங்களில் நடித்து வந்தததாலும் ஓய்விற்காக ராஷ்மிகா மாலத் தீவு சென்றுள்ளாராம். அவருடன் விஜய்யும் சென்றுள்ளதால் இருவரும் காதலிப்பது உறுதியாகியுள்ளது என்கிறார்கள்.
மாலத் தீவு செல்லும் நட்சத்திரங்கள் விதவிதமான புகைப்படங்களைப் பதிவிடுவது வழக்கம். ராஷ்மிகாவும், விஜய்யும் அப்படி ஜோடியாக ஏதாவது புகைப்படங்களைப் பதிவிட்டால் தான் அவர்களுக்குள் காதல் இருப்பது தெரிய வரும்.