ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் | 'ஸ்லம்டாக் மில்லியனர்' மூலம் இப்போதும் ராயல்டி பெறும் அனில் கபூர் | ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பது நிகிலா விமல் அல்ல வேதிகா ; உடைத்த சஸ்பென்ஸ் | சிம்பு படத்தில் நெல்சனுக்கு பதிலாக அஸ்வத் மாரிமுத்து | 69 வயதில் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஜாக்கி ஷெராப் |

தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கதாநாயகியாக மாறியவர் கன்னட நடிகை ருக்மணி வசந்த். கடந்த வருடம் தமிழில் 'ஏஸ்' மற்றும் 'மதராஸி', கன்னடத்தில் 'காந்தாரா சாப்டர் 1' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது கன்னடத்தில் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் தெலுங்கில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 'டிராகன்' படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார் ருக்மணி வசந்த்.
இந்த நிலையில் தற்போது தெலுங்கில் நடிகர் சர்வானந்த் நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ருக்மணி வசந்த். இந்த படத்தை இயக்குனர் சீனு வைத்லா இயக்குகிறார். பீரியட் ஆக்சன் படமாக உருவாகும் இந்த படத்தில் இளவரசி கதாபாத்திரத்தில் ருக்மணி வசந்த் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.