நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! |
2015ல் மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் ‛தனி ஒருவன்'. நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்த இந்த படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடித்திருந்தார். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். அது மட்டுமல்ல முதன்முறையாக ரீமேக் என்கிற ஏரியாவில் இருந்து வெளியே வந்து தனியாக கதையை உருவாக்கி வெற்றி வாகை சூடினார் இயக்குனர் மோகன்ராஜா. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வரவேற்பு பெற்றன. குறிப்பாக ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடித்த கண்ணால கண்ணால என்கிற பாடல் ரசிகர்களின் பேவரைட் பாடலாக மாறியது. இந்த பாடலை ஹிப் ஹாப் ஆதியே எழுதி இருந்தார்.
இந்த படம் வெளியாகி 8 வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது 100 கோடி பார்வையாளர்களால் இந்த பாடல் பார்க்கப்பட்டு புதிய சாதனையை செய்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து கொண்டுள்ள இயக்குனர் மோகன்ராஜா, "இதுதான் இந்தப் படத்திற்காக எனக்கு நீங்கள் மேற்கொண்ட முதல் பணி. அப்போது இந்த பாடலைக் கேட்டுவிட்டு நான் எவ்வளவு ஸ்தம்பித்து போய் நின்றேன் என்பது உங்களுக்கு தெரியும்' என்று பழைய நினைவுகளை குறிப்பிட்டு படத்தின் இசையமைப்பாளரும், இந்த படத்தின் பாடலாசிரியருமான ஹிப் ஹாப் ஆதிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.