ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
2015ல் மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் ‛தனி ஒருவன்'. நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்த இந்த படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடித்திருந்தார். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். அது மட்டுமல்ல முதன்முறையாக ரீமேக் என்கிற ஏரியாவில் இருந்து வெளியே வந்து தனியாக கதையை உருவாக்கி வெற்றி வாகை சூடினார் இயக்குனர் மோகன்ராஜா. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வரவேற்பு பெற்றன. குறிப்பாக ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடித்த கண்ணால கண்ணால என்கிற பாடல் ரசிகர்களின் பேவரைட் பாடலாக மாறியது. இந்த பாடலை ஹிப் ஹாப் ஆதியே எழுதி இருந்தார்.
இந்த படம் வெளியாகி 8 வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது 100 கோடி பார்வையாளர்களால் இந்த பாடல் பார்க்கப்பட்டு புதிய சாதனையை செய்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து கொண்டுள்ள இயக்குனர் மோகன்ராஜா, "இதுதான் இந்தப் படத்திற்காக எனக்கு நீங்கள் மேற்கொண்ட முதல் பணி. அப்போது இந்த பாடலைக் கேட்டுவிட்டு நான் எவ்வளவு ஸ்தம்பித்து போய் நின்றேன் என்பது உங்களுக்கு தெரியும்' என்று பழைய நினைவுகளை குறிப்பிட்டு படத்தின் இசையமைப்பாளரும், இந்த படத்தின் பாடலாசிரியருமான ஹிப் ஹாப் ஆதிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.