சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
இன்றைய தேதியில் தென்னிந்திய அளவில் அதிக படங்களில் நடித்து வருபவர் நடிகர் சரத்குமார் தான். கிட்டத்தட்ட 20 படங்களில் நடித்து வரும் சரத்குமார், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
ஹீரோவாகத்தான் நடிப்பேன் என பிடிவாதம் காட்டாமல் தற்போது குணச்சித்திர நடிகராக, வில்லனாக தன்னை மாற்றிக்கொண்டதால் அவருக்கு வேறு மொழியில் இருந்தும் வாய்ப்புகள் தேடி வருகின்றன. அந்த வகையில் தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடிக்கும் கிறிஸ்டோபர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சரத்குமார், நடிகர் திலீப் நடிக்கும் படத்திலும் தற்போது முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் நடிகை தமன்னா முதன்முதலாக மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திலீப்பை வைத்து ஏற்கனவே ராம்லீலா என்கிறார் சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் அருண்கோபி தான் இந்த படத்தை இயக்குகிறார். ஏற்கனவே மலையாளத்தில் 2011ல் வெளியான கிறிஸ்டியன் பிரதர்ஸ் என்கிற படத்தில் சரத்குமாரும் திலீப்பும் இணைந்து நடித்துள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.