'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
நடிகை சினேகா திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு செலக்டிவ் ஆன படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்தவகையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தி கிரேட் பாதர் என்கிற படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்திருந்தவர், தற்போது மீண்டும் மலையாளத்தில், மம்முட்டி நடித்து வரும் கிறிஸ்டோபர் என்கிற படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். அமலாபால் மற்றும் ஐஸ்வர்ய லட்சுமி மற்ற இரு கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
இந்த படத்தில் நடித்தது குறித்து சினேகா கூறும்போது, “இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.. என்ன விதமான கதாபாத்திரம் என என்னால் இப்போது சொல்ல முடியாவிட்டாலும் இரண்டுவித காலகட்டத்தில் இரண்டுவிதமான தோற்றங்களில் நடிக்கிறேன் என்பதை மட்டும் இப்போது சொல்ல முடியும். ஒரு நல்ல படத்தின் மூலம் மீண்டும் மலையாளத்திற்கு திரும்பி வரவேண்டும் என்று நான் காத்திருந்தேன். அந்த வாய்ப்பு இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் மூலமாக என்னை தேடி வந்தபோது மறுக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.