கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படம் வெளியான ஐந்து நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியானது. தற்போது வெளிநாடுகளிலும் கூட இப்படம் ஐந்தே நாட்களில் ரூ.100 கோடியைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் அப்டேட் செய்துள்ளார்கள்.
அமெரிக்கா, அரேபிய நாடுகள், இங்கிலாந்து, மலேசிய, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா என தமிழர்கள் அதிகமாக வசூலிக்கும் நாடுகளில் இப்படத்தின் வசூல் இதற்கு முன்பு வெளியான முன்னணி ஹீரோக்களின் படங்களைக் காட்டிலும் அதிகமாக வசூலிப்பதாகச் சொல்கிறார்கள். அமெரிக்காவில் மட்டுமே இப்படம் ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகவும், அடுத்ததாக அரேபிய நாடுகளில் ரூ.19 கோடி வரையிலும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்த் திரைப்படம் ஒன்று வெளிநாடுகளிலும் ஐந்தே நாட்களில் ரூ.100 கோடி வசூல் சாதனையைப் படைத்திருப்பது இதுவே முதல் முறை. இந்த வார இறுதி நாட்களிலும் வெளிநாடுகளில் இப்படம் இன்னும் வசூலைக் குவிக்கும் என்கிறார்கள்.