ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | 'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி |

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'பொன்னியின் செல்வன்'. படம் வெளியான நாளிலிருந்தே தினமும் படத்தைப் பார்க்க மக்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். காலாண்டு விடுமுறை நாட்கள், ஆயுத பூஜை விடுமுறை நாட்கள் என்பதால் தியேட்டர்களில் கூட்டம் குறையவில்லை.
படம் வெளியான ஐந்து நாட்களில் இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு விஜய் நடித்து வெளிவந்த 'சர்க்கார், பிகில்' ஆகிய படங்கள் ஒரு வாரத்தில் அந்த சாதனையை நிகழ்த்தியிருந்தன. ஆனால், 'பொன்னியின் செல்வன்' படம் ஐந்தே நாட்களில் ரூ.100 கோடியைக் கடந்து தியேட்டர்காரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், இந்திய அளவில் இப்படம் 170 கோடி வரை வசூலித்திருப்பதாகச் சொல்கிறார்கள். உலகம் முழுவதும் வசூல் கடந்த ஐந்து நாட்களில் ரூ.300 கோடியைக் கடந்திருக்கும் என்றும் இந்த வார இறுதிக்குள் ரூ.500 கோடியைக் கடக்கும் என்றும் மேலும் தெரிவிக்கிறார்கள்.