செல்பி : போலீசாருக்காக காரை விட்டு இறங்கி வந்த ரஜினி | மும்பையில் குடியேறிய சூர்யா? | மூளையில் ரத்தக்கசிவு : லண்டன் மருத்துவமனையில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ அட்மிட் | தெலுங்கில் பிசியாகும் ஐஸ்வர்யா மேனன் | பாடகர் டி.எம்.எஸ்ஸிற்கு கவுரவம் : அவரது பெயரில் சாலை திறப்பு | மனித உரிமை ஆணையத்தின் பின்னணியில் உருவாகும் படம் | புதுமுகங்கள் உருவாக்கும் 'தலைகவசமும் 4 நண்பர்களும்' | ஜூனியர் என்டிஆரின் 30வது படத்தை தொடங்கி வைத்தார் ராஜமவுலி | இந்திய வம்சாவளி நடிகைக்கு அமெரிக்க ஜனாதிபதி விருது | தந்தையை இழந்து வாடும் அஜித்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய் |
மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' படத்தில் தலைப்பின் நாயகனாக அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். அவருடைய நடிப்பும் படத்தில் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த் படத்தைப் பார்த்து ஜெயம் ரவிக்கு அவருடைய பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். அது குறித்து ஜெயம் ரவி சற்று முன் தன்னுடைய டுவிட்டரில்,
“அந்த ஒரு நிமிட உரையாடல் எனது நாள், எனது வருடமாகியது, எனது வாழ்க்கைக்கு ஒரு முழு அர்த்தத்தைக் கொடுத்தது. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும், குழந்தை போன்ற ஆர்வத்துக்கும் நன்றி தலைவா. நீங்கள் படத்தையும், எனது நடிப்பையும் விரும்பினீர்கள் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியும், பணிவும், ஆசீர்வாதமும் பெற்றேன்,” என குறிப்பிட்டுள்ளார்.