பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' படத்தில் தலைப்பின் நாயகனாக அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். அவருடைய நடிப்பும் படத்தில் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த் படத்தைப் பார்த்து ஜெயம் ரவிக்கு அவருடைய பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். அது குறித்து ஜெயம் ரவி சற்று முன் தன்னுடைய டுவிட்டரில்,
“அந்த ஒரு நிமிட உரையாடல் எனது நாள், எனது வருடமாகியது, எனது வாழ்க்கைக்கு ஒரு முழு அர்த்தத்தைக் கொடுத்தது. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும், குழந்தை போன்ற ஆர்வத்துக்கும் நன்றி தலைவா. நீங்கள் படத்தையும், எனது நடிப்பையும் விரும்பினீர்கள் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியும், பணிவும், ஆசீர்வாதமும் பெற்றேன்,” என குறிப்பிட்டுள்ளார்.




