சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது ஹிந்தியிலும் மாறிமாறி பிசியாக நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.. அதேசமயம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஜெயராம் நடித்த மார்க்கோனி மத்தாய் என்கிற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நுழைந்த அவர், அதையடுத்து மலையாளத்தில் தனது இரண்டாவது படமாக 19(1)(a) என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்து வி.எஸ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார். 96 புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இந்தப்படத்தில் விஜய்சேதுபதி தமிழ்நாட்டை சேர்ந்த அதேசமயம் சூழ்நிலை காரணமாக கேரளாவில் குடியிருக்கும் எழுத்தளார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக இந்தப்படத்தின் டைட்டிலுக்கேற்றபடி கருத்து சுதந்திரம் பற்றி இந்தப்படம் பேசுகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த வருடமே முடிவடைந்துவிட்ட நிலையில் சமீபத்தில் தான் ரிலீசுக்கான பணிகள் துவங்கப்பட்டன. இந்தநிலையில் இந்தப்படம் விரைவில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் விரைவில் நேரடியாக வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.