'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றினாலும் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம், நடிகராக சினிமாவில் நுழைந்தவர் சித்தார்த். அதன்பிறகு தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தொடர்ந்து மாறிமாறி நடித்து வந்த சித்தார்த், இரண்டிலுமே தன்னை தக்க வைத்துக்கொள்ள தற்போது வரை போராடி வருகிறார். இதற்கிடையே தனது மனைவியை விவாகரத்து செய்த சித்தார்த் அதன்பிறகு ஸ்ருதிஹாசன், சமந்தா ஆகியோருடன் இணைந்து நடித்த போது காதல் கிசுகிசுக்களில் சிக்கினார்.
சமீபத்தில் தெலுங்கில் வெளியான மகா சமுத்திரம் என்கிற படத்தில் சித்தார்த்துடன் நடிகை அதிதி ராவ் ஹைதரியும் இணைந்து நடித்திருந்தார் இந்த நிலையில் சமீபத்தில் மும்பையில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் இருந்து வெளியே வந்த அதிதி ராவ் அங்கே வந்த சித்தார்த்துடன் ஒரே காரில் ஏறி கிளம்பி சென்றுள்ளார். முன்னதாக இவர்கள் இருவரையும் அங்கு இருந்த பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க முயற்சிக்க அதனால் கோபமான சித்தார்த், நேரம் வரும்போது நானே சொல்கிறேன்.. தயவுசெய்து புகைப்படம் எடுக்காதீர்கள்” என்று அவர்களிடம் கெஞ்சி கேட்டபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்துள்ளார். இதன் மூலம் சித்தார்த்தும் அதிதியும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்களோ என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.