பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றினாலும் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம், நடிகராக சினிமாவில் நுழைந்தவர் சித்தார்த். அதன்பிறகு தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தொடர்ந்து மாறிமாறி நடித்து வந்த சித்தார்த், இரண்டிலுமே தன்னை தக்க வைத்துக்கொள்ள தற்போது வரை போராடி வருகிறார். இதற்கிடையே தனது மனைவியை விவாகரத்து செய்த சித்தார்த் அதன்பிறகு ஸ்ருதிஹாசன், சமந்தா ஆகியோருடன் இணைந்து நடித்த போது காதல் கிசுகிசுக்களில் சிக்கினார்.
சமீபத்தில் தெலுங்கில் வெளியான மகா சமுத்திரம் என்கிற படத்தில் சித்தார்த்துடன் நடிகை அதிதி ராவ் ஹைதரியும் இணைந்து நடித்திருந்தார் இந்த நிலையில் சமீபத்தில் மும்பையில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் இருந்து வெளியே வந்த அதிதி ராவ் அங்கே வந்த சித்தார்த்துடன் ஒரே காரில் ஏறி கிளம்பி சென்றுள்ளார். முன்னதாக இவர்கள் இருவரையும் அங்கு இருந்த பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க முயற்சிக்க அதனால் கோபமான சித்தார்த், நேரம் வரும்போது நானே சொல்கிறேன்.. தயவுசெய்து புகைப்படம் எடுக்காதீர்கள்” என்று அவர்களிடம் கெஞ்சி கேட்டபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்துள்ளார். இதன் மூலம் சித்தார்த்தும் அதிதியும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்களோ என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.