ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
நாக சைதன்யா உடனான விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு புஷ்பா படத்தில் ‛ஓ சொல்றியா மாமா' என்ற பாடலுக்கு நடனம் ஆடி பரபரப்பை ஏற்படுத்திய சமந்தா, தற்போது ஹிந்தியிலும் 2 படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். அதன் காரணமாக தற்போது பாலிவுட் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் படுகவர்ச்சியான புகைப்படங்களையும், தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இணையதள நிகழ்ச்சியில் அக்ஷய் குமார் உடன் இணைந்து கலந்து கொண்டார் சமந்தா. அப்போது தனது திருமண வாழ்க்கை முடிவு குறித்த பல கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார். அதோடு, இந்த நிகழ்ச்சியின் போது அக்ஷய் குமாரும், சமந்தாவும், ‛ஓ சொல்றியா மாமா' ஹிந்தி பாடலுக்கு மேடையில் நடனம் ஆடியுள்ளனர். அது குறித்த புரோமோ வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் தற்போது வைரல் ஆகி வருகிறது.