பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

நாக சைதன்யா உடனான விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு புஷ்பா படத்தில் ‛ஓ சொல்றியா மாமா' என்ற பாடலுக்கு நடனம் ஆடி பரபரப்பை ஏற்படுத்திய சமந்தா, தற்போது ஹிந்தியிலும் 2 படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். அதன் காரணமாக தற்போது பாலிவுட் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் படுகவர்ச்சியான புகைப்படங்களையும், தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இணையதள நிகழ்ச்சியில் அக்ஷய் குமார் உடன் இணைந்து கலந்து கொண்டார் சமந்தா. அப்போது தனது திருமண வாழ்க்கை முடிவு குறித்த பல கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார். அதோடு, இந்த நிகழ்ச்சியின் போது அக்ஷய் குமாரும், சமந்தாவும், ‛ஓ சொல்றியா மாமா' ஹிந்தி பாடலுக்கு மேடையில் நடனம் ஆடியுள்ளனர். அது குறித்த புரோமோ வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் தற்போது வைரல் ஆகி வருகிறது.