என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
நாக சைதன்யா உடனான விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு புஷ்பா படத்தில் ‛ஓ சொல்றியா மாமா' என்ற பாடலுக்கு நடனம் ஆடி பரபரப்பை ஏற்படுத்திய சமந்தா, தற்போது ஹிந்தியிலும் 2 படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். அதன் காரணமாக தற்போது பாலிவுட் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் படுகவர்ச்சியான புகைப்படங்களையும், தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இணையதள நிகழ்ச்சியில் அக்ஷய் குமார் உடன் இணைந்து கலந்து கொண்டார் சமந்தா. அப்போது தனது திருமண வாழ்க்கை முடிவு குறித்த பல கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார். அதோடு, இந்த நிகழ்ச்சியின் போது அக்ஷய் குமாரும், சமந்தாவும், ‛ஓ சொல்றியா மாமா' ஹிந்தி பாடலுக்கு மேடையில் நடனம் ஆடியுள்ளனர். அது குறித்த புரோமோ வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் தற்போது வைரல் ஆகி வருகிறது.