வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் | காவல் நிலையத்தில் நடக்கும் கதை | 'லெகசி' வெப் தொடரில் கேங்ஸ்டர் ஆக மாதவன் |

தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ருத்ரன். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஜூலை முதல் வாரத்தில் தொடங்குகிறது. இதற்காக ஐதராபாத்தில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ருத்ரன் படம் குறித்து இயக்குனர் கதிரேசன் கூறுகையில், இந்த படம் 60% ஆக்சன் காட்சியில் உருவாகியிருக்கிறது. இப்படத்திற்காக 10 கிலோ எடையை அதிகரித்து நடித்துள்ள ராகவா லாரன்ஸ், பின்னர் காட்சிகளுக்காக மூன்று மாதங்கள் பயிற்சி எடுத்தார். மேலும் இப்படத்தில் சரத்குமார் மற்றும் லாரன்ஸ் இடையே பல அதிரடியான சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் இதுவரை லாரன்ஸ் நடித்த படங்களில் அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த படமாகவும், இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களில் வித்தியாசமானதாகவும் இப்படம் இருக்கும். சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனைப் பற்றிய கதையில் உருவாகி இருக்கிறது. தீமை பிறப்பதில்லை, படைக்கப்படுகிறது என்பது தான் இப்படத்தில் டேக் லைன் என்று கூறுகிறார்.




