'கொட்டுக்காளி' விருதுக்காக எடுக்கப்பட்ட படமா? - இயக்குனர் விளக்கம் | குழந்தை நட்சத்திரங்கள் வளர காத்திருந்தது ஏன்? - ஹலிதா ஷமீம் விளக்கம் | இரண்டே மாதத்தில் முடிந்த ரியோ படம் | அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் | தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் |
கதிரேசன் தயாரிப்பு, இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'ருத்ரன்'. நாளை(ஏப்., 14) வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த இப்படத்தின் வெளியீட்டை எதிர்த்து, அப்படத்தின் ஹிந்தி டப்பிங், மற்றும் வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை வாங்கியிருந்த ரெவன்சா குளோபல் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனம் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை உத்தரவை வாங்கியிருந்தது.
தயாரிப்பாளர் மேற்கொண்டு 4 கோடி ரூபாயைக் கேட்டதால் அந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இம்மாதம் 24ம் தேதி வரை படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிர்த்து தயாரிப்பாளர் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் தரப்பின் மேல் முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டது. ஹிந்தி டப்பிங் ரைட்ஸிற்கும், படத்தை தியேட்டரிலோ, ஓடிடியிலோ வெளியிட எந்த சம்பந்தபமும் இல்லை என்பதை சுட்டிக் காட்டிய தயாரிப்பாளர் கதிரேசன் தரப்பு அதற்கான ஒப்பந்தத்தையும் காண்பித்துள்ளனர். அதை ஏற்று தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, 'ருத்ரன்' படம் நாளை திட்டமிட்டபடி வெளியாக உள்ளது.
இதையடுத்து 'தடைகளை வென்ற ருத்ரன்' என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 'தர்மம் தலை காக்கும்' என படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸும் டுவீட் செய்துள்ளார்.