மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

கடந்த சில வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெகாதொடர் 'மகாநதி'. இந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் இளம் நடிகை ஷாதிகா. இவர் 'நான் மகான் அல்ல, நெஞ்சில் துணிவிருந்தால்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது ஷாதிகா அளித்த பேட்டியில், மகாநதி தொடரில் நடித்தபோது இருந்த தயக்கம் குறித்து அவர் கூறியதாவது, "மகாநதி சீரியலில் ராகினி கதாபாத்திரத்தில் கமிட் ஆகும் போது எனக்கு இது இவ்ளோ பெரிய நெகட்டிவ் கதாபாத்திரம் என தெரியாது. நான் சீரியலில் நடிக்கும் போது இந்த மாதிரி யாரும் என்னை மோசமாக திட்டியதில்லை. திடீரென்று அவ்வளவு வெறுப்பு பார்க்கவும் ரொம்ப பயந்துட்டேன். இது நமக்கு செட் ஆகுதா, இல்லையா என குழப்பமா இருந்தது. நான் ரொம்ப சென்சிடிவ் ஆன கேரக்டர். சமூக வலைதளங்களில் கமென்ட்களை படித்துவிட்டுச் இயக்குனர் பிரவீன் சார்கிட்ட சீரியலில் இருந்து விலகிக்கிறேன் என்றெல்லாம் கூறினேன். அவர், கமென்ட் எல்லாம் மனதில் வச்சுகாதீங்க விடுங்க என கூறி என்னை ஆறுதல் படுத்தினார்" எனக் கூறினார்.




