திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
குணசேகர் இயக்கத்தில் நடிகை சமந்தா, தேவ் மோகன், அதிதி பாலன் நடிப்பில் உருவாகி உள்ள இதிகாச படமான சாகுந்தலம் நாளை ஏப்., 14ம் வெளியாகிறது. தெலுங்கில் தயாராகி பான் இந்தியா படமாக உருவாகி உள்ள இந்தப்படம் ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் வெளியாகிறது.
மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்த சமந்தா சில மாத இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். ஹிந்தியில் உருவாகும் சிட்டாடல் தொடரில் நடித்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக சாகுந்தலம் படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதன் காரணமாக சோர்வடைந்த அவர் தற்போது தனது உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டரில் 'சாகுந்தலம்' படத்திற்கான புரோமோஷன் பணிகளில் இந்த வாரம் ஈடுபட்டு உங்கள் அனைவரது அன்பையும் பெற ஆவலாக காத்திருந்தேன். ஆனால், இதன் தீவிர பணிகள் காரணமாக சோர்வு, காய்ச்சல் மற்றும் என் குரலையும் இழந்துள்ளேன். அதனால், தொடர்ந்து நடைபெற உள்ள புரோமோஷன் பணிகளில் கலந்து கொள்ள முடியாது. நீங்கள் வழக்கம்போல, உங்கள் அன்பை காண்பிக்க வேண்டும்' என கூறியுள்ளார்.