ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
குணசேகர் இயக்கத்தில் நடிகை சமந்தா, தேவ் மோகன், அதிதி பாலன் நடிப்பில் உருவாகி உள்ள இதிகாச படமான சாகுந்தலம் நாளை ஏப்., 14ம் வெளியாகிறது. தெலுங்கில் தயாராகி பான் இந்தியா படமாக உருவாகி உள்ள இந்தப்படம் ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் வெளியாகிறது.
மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்த சமந்தா சில மாத இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். ஹிந்தியில் உருவாகும் சிட்டாடல் தொடரில் நடித்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக சாகுந்தலம் படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதன் காரணமாக சோர்வடைந்த அவர் தற்போது தனது உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டரில் 'சாகுந்தலம்' படத்திற்கான புரோமோஷன் பணிகளில் இந்த வாரம் ஈடுபட்டு உங்கள் அனைவரது அன்பையும் பெற ஆவலாக காத்திருந்தேன். ஆனால், இதன் தீவிர பணிகள் காரணமாக சோர்வு, காய்ச்சல் மற்றும் என் குரலையும் இழந்துள்ளேன். அதனால், தொடர்ந்து நடைபெற உள்ள புரோமோஷன் பணிகளில் கலந்து கொள்ள முடியாது. நீங்கள் வழக்கம்போல, உங்கள் அன்பை காண்பிக்க வேண்டும்' என கூறியுள்ளார்.