அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
குணசேகர் இயக்கத்தில் நடிகை சமந்தா, தேவ் மோகன், அதிதி பாலன் நடிப்பில் உருவாகி உள்ள இதிகாச படமான சாகுந்தலம் நாளை ஏப்., 14ம் வெளியாகிறது. தெலுங்கில் தயாராகி பான் இந்தியா படமாக உருவாகி உள்ள இந்தப்படம் ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் வெளியாகிறது.
மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்த சமந்தா சில மாத இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். ஹிந்தியில் உருவாகும் சிட்டாடல் தொடரில் நடித்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக சாகுந்தலம் படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதன் காரணமாக சோர்வடைந்த அவர் தற்போது தனது உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டரில் 'சாகுந்தலம்' படத்திற்கான புரோமோஷன் பணிகளில் இந்த வாரம் ஈடுபட்டு உங்கள் அனைவரது அன்பையும் பெற ஆவலாக காத்திருந்தேன். ஆனால், இதன் தீவிர பணிகள் காரணமாக சோர்வு, காய்ச்சல் மற்றும் என் குரலையும் இழந்துள்ளேன். அதனால், தொடர்ந்து நடைபெற உள்ள புரோமோஷன் பணிகளில் கலந்து கொள்ள முடியாது. நீங்கள் வழக்கம்போல, உங்கள் அன்பை காண்பிக்க வேண்டும்' என கூறியுள்ளார்.