திருமணத்திற்கு பிறகு மும்பையில் குடியேறிய சமந்தா! | 'ஜனநாயகன்' டிக்கெட் முன்பதிவு தொடங்கியது! ஜெர்மனியில் 5.5 லட்சம் வரை வசூல்!! | 'தி கேர்ள்ப்ரெண்ட்' பட முழு ஸ்கிரிப்ட்டையும் ஆன்லைனில் அப்லோடு செய்த இயக்குனர் | சென்சார் கெடுபிடி காட்டிய இளம் நடிகரின் பட ரிலீசுக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல் | மலேசியாவில் அஜித்தை சந்தித்த ஸ்ரீ லீலா | சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பெண்கள் அணி: சங்க தலைவர் பரத் தகவல் | நான் சொல்வதை அவன் கேட்கமாட்டான்: கூல் சுரேஷ் குறித்து சந்தானம் | தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” |

மணிரத்னம் இயக்கி உள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் 2ம் பாகம் வருகிற 28ம் தேதி வெளிவர இருக்கிறது. தற்போது படத்தின் பாடல்களை வெளியிட்டு வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இளங்கோ கிருஷ்ணா எழுதிய பாடல்கள் வெளியிடப்பட்டு வருகிறது. முதல் பாடலாக “அ க ந க…” பாடல், இரண்டாம் பாடலான “வீரா ராஜ வீரா…” வெளியானது. தற்போது மூன்றாவது பாடலாக “சிவோகம்…” என்ற சிவபக்தி பாடல் வெளியாகி உள்ளது.
ஆதிசங்கரர் எழுதிய நிர்வாண ஷதகத்தில் இடம்பெற்ற சமஸ்கிருத பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். சத்யபிரகாஷ், நாராயணன், ஸ்ரீகாந்த் ஹரிகரன், நிவாஸ், அரவிந்த் ஸ்ரீனிவாஸ், செண்பகராஜ், டி.எஸ்.அய்யப்பன் இணைந்து பாடி உள்ளனர்.
இந்த பாடல் நடிகர் ரகுமான் நடித்துள்ள மதுராந்தக சோழன் கேரக்டரின் பின்னணிக்காக உருவாக்கப்பட்டுள்ளது. வாரிசுரிமை அடிப்படையில் மதுராந்தகரே சோழ நாட்டின் மன்னராகி இருக்க வேண்டும். ஆனால் தாய் செம்பியன் மாதேவின் விருப்பப்படி பக்தி மார்க்கத்தில் பயணித்தார். சிவபக்கதாரான அவர் அகோரிகளுடன் சில காலம் வாழ்ந்தார். பின்னர் அகோரிகள் கூட்டத்துடன் சோழ ராஜ்யத்துக்கு வந்தார். இந்த நிகழ்வுகளின் பின்னணியாக இந்த பாடல் ஒலிக்கும் என்று பாடலோடு இணைத்து வெளியிடப்பட்டுள்ள காட்சிகள் மூலம் அறிய முடிகிறது.




