பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
பாலா இயக்கத்தில், சூர்யா கதாநாயகனாக நடிக்க ஆரம்பமான 'வணங்கான்' படத்தில் தெலுங்கு நடிகையான கிர்த்தி ஷெட்டி கதாநாயகியாக ஒப்பந்தமாகி படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். ஆனால், பாலா, சூர்யா இடையே மோதல் ஏற்பட்டதால் அப்படத்திலிருந்து சூர்யா விலகினார். கதையிலும் மாற்றம் ஏற்பட்டதால் கிர்த்தியும் நடிக்க முடியாமல் போனது. தற்போது அப்படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார்.
தமிழில் 'த வாரியர்' படம் மூலம் கடந்த வருடம் அறிமுகமானார் கிர்த்தி. ஆனால், அந்தப் படம் இங்கு ஓடவில்லை. அடுத்து முன்னணி நடிகரான சூர்யாவுடன் ஜோடியாக நடிக்கலாம், தமிழிலும் தடம் பதிக்கலாம் என நினைத்திருந்த கிரித்திக்கு அந்த வாய்ப்பும் எதிர்பாராமல் பறிபோனது. இப்போது சூர்யாவின் தம்பி கார்த்தியோடு ஜோடி சேரும் வாய்ப்பு வந்ததும் உடனடியாக நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார்.
நலன் குமாரசாமி இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சைலன்ட்டாக ஆரம்பமாகி நடந்து வருகிறது. அதில் கலந்து கொண்டு கிர்த்தியும் நடித்து வருகிறாராம். வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள 'கஸ்டடி' படத்திலும் கிர்த்திதான் கதாநாயகி. அடுத்து ஜெயம் ரவி நடிக்க உள்ள 'ஜீனி' படத்திலும் நடிக்க உள்ளார் எனத் தெரிகிறது.