மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து நடித்திருந்த சாணிக்காயுதம் படம் கீர்த்தி சுரேஷ்க்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. என்றாலும் மலையாளத்தில் டொவினோ தாமசுடன் அவர் நடித்து கடந்த வாரத்தில் வெளியான வாஸி என்ற படம் வரவேற்பை பெறவில்லை. இந்தப் படத்தின் கதை மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்த கீர்த்தி சுரேஷ், மலையாள சினிமாவில் தனக்கு ஒரு பெரிய ஹிட் படமாக அமையும் என்று இப்படத்தை தனது குடும்பத்தினர் மூலம் தயாரிக்கவும் செய்திருந்தார். ஆனால் அப்படம் அவருக்கு ஏமாற்றத்தை கொடுத்து விட்டது. என்றாலும் தற்போது தனது கைவசம் தமிழில் உதயநிதியுடன் நடித்து வரும் மாமன்னன் மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவி உடன் நடிக்கும் போலா சங்கர், நானியுடன் தசரா போன்ற படங்கள் இருப்பதால் இந்த படங்கள் தனக்கு கைகொடுக்கும் நம்பிக்கை வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.