பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து நடித்திருந்த சாணிக்காயுதம் படம் கீர்த்தி சுரேஷ்க்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. என்றாலும் மலையாளத்தில் டொவினோ தாமசுடன் அவர் நடித்து கடந்த வாரத்தில் வெளியான வாஸி என்ற படம் வரவேற்பை பெறவில்லை. இந்தப் படத்தின் கதை மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்த கீர்த்தி சுரேஷ், மலையாள சினிமாவில் தனக்கு ஒரு பெரிய ஹிட் படமாக அமையும் என்று இப்படத்தை தனது குடும்பத்தினர் மூலம் தயாரிக்கவும் செய்திருந்தார். ஆனால் அப்படம் அவருக்கு ஏமாற்றத்தை கொடுத்து விட்டது. என்றாலும் தற்போது தனது கைவசம் தமிழில் உதயநிதியுடன் நடித்து வரும் மாமன்னன் மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவி உடன் நடிக்கும் போலா சங்கர், நானியுடன் தசரா போன்ற படங்கள் இருப்பதால் இந்த படங்கள் தனக்கு கைகொடுக்கும் நம்பிக்கை வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.