எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கியவர் பிரசாந்த் நீல். இவர் தற்போது பிரபாஸ் - ஸ்ருதிஹாசன் நடித்து வரும் சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. மேலும் இந்த படத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் தான் நடிப்பது குறித்து ஒரு பேட்டியில் பிருதிவிராஜ் கூறுகையில், பிரபாஸ் நடிக்கும் படம் என்பதால் சலார் பட வாய்ப்பை என்னால் தவிர்க்க முடியவில்லை. பல படங்களில் கேரக்டர் மற்றும் வில்லன் ரோல்களில் நடித்திருப்பதால் இந்தப்படத்தில் நடிக்கிறேன். அதோடு இந்த படத்தில் கமிட் ஆகும்போது இயக்குனர் இடத்தில் ஒரு கண்டிசன் போட்டேன். அதாவது, இந்த படம் எத்தனை மொழிகளில் வெளியானாலும் அத்தனை மொழிகளிலும் எனக்கான கேரக்டருக்கு நான் தான் சொந்தக்குரலில் டப்பிங் பேசுவேன் என்று கூறினேன். அதற்கு இயக்குனர் பிரஷாந்த் நீல் ஒப்புக் கொண்டார். அதன் பிறகே இப்படத்தில் கமிட்டானேன் என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் நடிகர் பிரித்விராஜ் .