20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கியவர் பிரசாந்த் நீல். இவர் தற்போது பிரபாஸ் - ஸ்ருதிஹாசன் நடித்து வரும் சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. மேலும் இந்த படத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் தான் நடிப்பது குறித்து ஒரு பேட்டியில் பிருதிவிராஜ் கூறுகையில், பிரபாஸ் நடிக்கும் படம் என்பதால் சலார் பட வாய்ப்பை என்னால் தவிர்க்க முடியவில்லை. பல படங்களில் கேரக்டர் மற்றும் வில்லன் ரோல்களில் நடித்திருப்பதால் இந்தப்படத்தில் நடிக்கிறேன். அதோடு இந்த படத்தில் கமிட் ஆகும்போது இயக்குனர் இடத்தில் ஒரு கண்டிசன் போட்டேன். அதாவது, இந்த படம் எத்தனை மொழிகளில் வெளியானாலும் அத்தனை மொழிகளிலும் எனக்கான கேரக்டருக்கு நான் தான் சொந்தக்குரலில் டப்பிங் பேசுவேன் என்று கூறினேன். அதற்கு இயக்குனர் பிரஷாந்த் நீல் ஒப்புக் கொண்டார். அதன் பிறகே இப்படத்தில் கமிட்டானேன் என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் நடிகர் பிரித்விராஜ் .