நானி - சாய்பல்லவி படம் ஆஸ்கருக்கு பரிந்துரை | எப்படி இருந்த கீர்த்தி இப்படி | கனடாவிலிருந்து வந்த பாடகி | வருகிறான் ‛சோழா சோழா' | குடும்பத்துடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த சூரி | திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் காட்சியை பார்த்து ரசித்த தனுஷ் | ‛லால் சிங் தத்தா' படத்தை இணையதளத்தில் வெளியிட்ட இரண்டு பேர் கைது | ஹிந்தியில் அறிமுகமாகிறார் அனுபமா பரமேஸ்வரன் | ஆர்ஆர்ஆர் படத்திற்கு 99 சதவீதம் ஆஸ்கர் கிடைக்க வாய்ப்பு : அனுராக் காஷ்யப் கணிப்பு | கிர்த்தி ஷெட்டிக்கு இரண்டாவது அதிர்ச்சி |
சாய்பல்லவி நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் தெலுங்கு படம் விராட பருவம். இதில் ராணா நக்சலைட்டாக நடித்திருக்கிறார். சாய்பல்லவி அவரது காதலியாக நடித்திருக்கிறார். படம் வருகிற 17ம் தேதி வெளிவருவதை தொடர்ந்து அதன் புரமோசன் பணிகளில் பிசியாக இருக்கிறார் சாய்பல்லவி.
ராணாவும், சாய்பல்லவியும் இணைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள். சாய்பல்லவியை காண ஆயிரக்கணக்கான மக்கள் நிகழ்ச்சியில் கூடுகிறார்கள். சாய் பல்லவியுடன் சேர்ந்து செல்பி எடுக்கும் ஆசையில் நெருக்கி அடித்துக்கொண்டு அவர் அருகில் வந்து விடுகிறார்கள். அப்படி ரசிகர்கள் வந்தபோது சாய் பல்லவியை அவர்களிடம் இருந்து பத்திரமாக காப்பாற்றினார் ராணா. நிகழ்ச்சியின்போது மழை பெய்யவே சாய் பல்லவிக்கு குடை பிடித்து நின்றார் ராணா.
இதுகுறித்து சாய்பல்லவியிடம் ஒரு நேர்காணலில் கேட்டபோது, அவர் நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல படப்பிடிப்பு தளத்திலும் எனக்கு ஒரு பவுன்சர்போல இருந்தார். ராணா மிகச்சிறந்த மனிதர், சிறந்த மனிதாபிமானி என்று கூறியிருக்கிறார் சாய்பல்லவி.