ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சாய்பல்லவி நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் தெலுங்கு படம் விராட பருவம். இதில் ராணா நக்சலைட்டாக நடித்திருக்கிறார். சாய்பல்லவி அவரது காதலியாக நடித்திருக்கிறார். படம் வருகிற 17ம் தேதி வெளிவருவதை தொடர்ந்து அதன் புரமோசன் பணிகளில் பிசியாக இருக்கிறார் சாய்பல்லவி.
ராணாவும், சாய்பல்லவியும் இணைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள். சாய்பல்லவியை காண ஆயிரக்கணக்கான மக்கள் நிகழ்ச்சியில் கூடுகிறார்கள். சாய் பல்லவியுடன் சேர்ந்து செல்பி எடுக்கும் ஆசையில் நெருக்கி அடித்துக்கொண்டு அவர் அருகில் வந்து விடுகிறார்கள். அப்படி ரசிகர்கள் வந்தபோது சாய் பல்லவியை அவர்களிடம் இருந்து பத்திரமாக காப்பாற்றினார் ராணா. நிகழ்ச்சியின்போது மழை பெய்யவே சாய் பல்லவிக்கு குடை பிடித்து நின்றார் ராணா.
இதுகுறித்து சாய்பல்லவியிடம் ஒரு நேர்காணலில் கேட்டபோது, அவர் நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல படப்பிடிப்பு தளத்திலும் எனக்கு ஒரு பவுன்சர்போல இருந்தார். ராணா மிகச்சிறந்த மனிதர், சிறந்த மனிதாபிமானி என்று கூறியிருக்கிறார் சாய்பல்லவி.