'லியோ' படத்திற்குப் பிறகு தவிக்கும் தியேட்டர்காரர்கள் | அமிதாப் குடும்பத்தின் அடுத்த வாரிசு… | த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி மீது ஒரு கோடி நஷ்டஈடு கேட்டு மன்சூர் அலிகான் வழக்கு | நடிகர் டாக்டர் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட் | பாலிவுட் நடிகர் ஜூனியர் மெஹ்மூத் காலமானார் | 2023ல் ஹிந்தியில் 500 கோடி வசூல் படங்களைக் கொடுத்த தென்னிந்திய இயக்குனர்கள் | ‛முண்டாசுப்பட்டி' புகழ் நடிகர் ‛மதுரை' மோகன் காலமானார் | பழம்பெரும் நடிகை லீலாவதி காலமானார் | என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா |
சாய்பல்லவி நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் தெலுங்கு படம் விராட பருவம். இதில் ராணா நக்சலைட்டாக நடித்திருக்கிறார். சாய்பல்லவி அவரது காதலியாக நடித்திருக்கிறார். படம் வருகிற 17ம் தேதி வெளிவருவதை தொடர்ந்து அதன் புரமோசன் பணிகளில் பிசியாக இருக்கிறார் சாய்பல்லவி.
ராணாவும், சாய்பல்லவியும் இணைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள். சாய்பல்லவியை காண ஆயிரக்கணக்கான மக்கள் நிகழ்ச்சியில் கூடுகிறார்கள். சாய் பல்லவியுடன் சேர்ந்து செல்பி எடுக்கும் ஆசையில் நெருக்கி அடித்துக்கொண்டு அவர் அருகில் வந்து விடுகிறார்கள். அப்படி ரசிகர்கள் வந்தபோது சாய் பல்லவியை அவர்களிடம் இருந்து பத்திரமாக காப்பாற்றினார் ராணா. நிகழ்ச்சியின்போது மழை பெய்யவே சாய் பல்லவிக்கு குடை பிடித்து நின்றார் ராணா.
இதுகுறித்து சாய்பல்லவியிடம் ஒரு நேர்காணலில் கேட்டபோது, அவர் நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல படப்பிடிப்பு தளத்திலும் எனக்கு ஒரு பவுன்சர்போல இருந்தார். ராணா மிகச்சிறந்த மனிதர், சிறந்த மனிதாபிமானி என்று கூறியிருக்கிறார் சாய்பல்லவி.