'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்கேற்றவர் வைஷ்ணவி பிரசாத். இவர் ரேடியோ ஜாக்கியாக இருந்து பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தார். தற்போது தொலைக்காட்சி தொகுப்பாளராக இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் பிசியாக செயல்படும் அவர் தற்போது தனது சமூகவலைதளத்தில் ஒரு பரபரப்பான பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு மர்ம நபர் இரு சக்கர வாகனத்தில் நான் எங்கு சென்றாலும் தன்னை பின் தொடர்ந்து வருகிறார். அடிக்கடி வீட்டு வாசல் வரை வந்து என்னை தொந்தரவு செய்கிறார். அந்த மர்ம இளைஞர் என்னை மிரட்டுவதைபோல பின்தொடர்ந்து வருகிறார், நான் தங்கியிருக்கும் வீட்டை அந்த வாலிபர் கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காக வெளியே சென்று 30 நிமிடம் வரை வீட்டுக்கு செல்லாமல் வெளியில் காத்திருந்து பின்னர் வீட்டுக்கு வரும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன். இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன். என்று அவர் கூறியிருக்கிறார்.
அதோடு பின் தொடரும் நபர் பற்றிய வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார். வைஷ்ணவியின் புகார் குறித்து விசாரணை நடத்துவதாகவும் இது போன்ற நிலைகளில் 100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறும் அல்லது காவல் உதவி என்ற செய்தியை பாதுகாப்பிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை போலீசார் சமூக வலைதள பக்கம் மூலம் பதில் அளித்துள்ளனர்.