அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? | பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் |
முந்தானை முடிச்சு படத்தில் காமெடி நடிகையாக அறிமுகமான கோவை சரளா தென்னிந்திய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சதிலீலாவதி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பிறகு தற்போது பிரபு சாலமான் இயக்கும் செம்பி படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார். தனது பேத்திக்கு நடந்த ஒரு அநியாத்துக்கு பழிவாங்கும் கேரக்டரில் அவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. செம்பி என்கிற மலைவாழ் பெண்ணாக அவர் நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் அவருடன் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதை தொடர்ந்து படக்குழுவினர் கமல்ஹாசனை சந்தித்தனர். அப்போது அவருக்கு படத்தின் டீசரை போட்டு காண்பித்தனர். பின்னர் கமல் படக்குழுவினரை வாழ்த்தினர். இந்த சந்திப்பு கோவை சரளாவின் ஏற்பாட்டின் பேரில் நடந்தது. சதிலீலாவதிக்கு பிறகு கதையின் நாயகியாக நடித்திருப்பதால் கமலை சந்தித்து வாழ்த்து பெற விரும்பியதால் இந்த சந்திப்பு நடந்தது.