ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முந்தானை முடிச்சு படத்தில் காமெடி நடிகையாக அறிமுகமான கோவை சரளா தென்னிந்திய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சதிலீலாவதி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பிறகு தற்போது பிரபு சாலமான் இயக்கும் செம்பி படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார். தனது பேத்திக்கு நடந்த ஒரு அநியாத்துக்கு பழிவாங்கும் கேரக்டரில் அவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. செம்பி என்கிற மலைவாழ் பெண்ணாக அவர் நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் அவருடன் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதை தொடர்ந்து படக்குழுவினர் கமல்ஹாசனை சந்தித்தனர். அப்போது அவருக்கு படத்தின் டீசரை போட்டு காண்பித்தனர். பின்னர் கமல் படக்குழுவினரை வாழ்த்தினர். இந்த சந்திப்பு கோவை சரளாவின் ஏற்பாட்டின் பேரில் நடந்தது. சதிலீலாவதிக்கு பிறகு கதையின் நாயகியாக நடித்திருப்பதால் கமலை சந்தித்து வாழ்த்து பெற விரும்பியதால் இந்த சந்திப்பு நடந்தது.