விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் | நடிகர் பாலாவின் மனைவிக்கு லாட்டரியில் 25 ஆயிரம் பரிசு |
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி, ஆரி, தான்யா ரவிச்சந்திரன், சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசன், மயில்சாமி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் நெஞ்சுக்கு நீதி.
இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்குநர் சீனு ராமசாமி பாராட்டியுள்ளார். மேலும் உதயநிதியிடம் ஒரு கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார். அவர் கூறியதாவது:
கண்ணே கலைமானே படத்தின் சமயத்தில் உதயநிதி அவர்களை மக்கள் அன்பன் என அழைத்தேன். அதை மெய்ப்பிக்கும் விதமாகச் சிறப்பாக இருந்தது நெஞ்சுக்கு நீதி. அன்று நான் சொன்னது போல இதுபோன்ற படங்களில் நடித்தால் கலையும் எதிர்கால முற்போக்குக் கருத்துலகமும் கைவிடாது. அது போல வெளிவர முடியாமல் தவிக்கும் கதையம்சம் நிறைந்த சிறுபட்ஜெட் படங்களை வாங்கி வெளியிட்டால் நடிகர்கள், இயக்குநர்கள், புதிய கலைஞர்கள் நன்றியோடு உங்களை என்றும் மறவாது வாழ்த்துவர். இப்பெருமையினைச் சொல்லி மகிழும் தருணத்தை எதிர்நோக்கி... வாழ்த்துகள் என்றார்.