என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படவிழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிம்பு பேசியது
தில்லுக்கு துட்டு, டிடி முந்தைய பாகங்கள் என்ஜாய் செய்து பார்த்தேன். சந்தானம் என் நண்பராக இருந்தாலும்,.நான் ரசிகனாக பார்த்தேன். இதில் சந்தானம் கலக்கி இருக்கிறார்..அவர் பாடி லாங்குவேஜ் நல்லா இருக்குது..படத்தை தயாரித்த ஆர்யாவுக்கு இந்த படம் வெற்றி படமாக அமையணும். மன்மதன் காலத்திலேயே சந்தானம் ஒரு 3 பேர் டீமை வச்சு இருப்பார். அன்று முதல் இன்று வரை அந்த டீம் இருக்கிறது..அந்த உழைப்பு அப்படியே தொடர்கிறது.
ரெடின் கிங்ஸ்லியை கோலமாவு கோகிலா காலத்தில் உங்களுக்கு தெரியும். எனக்கு அவரை வேட்டை மன்னன் காலத்தில் இருந்தே தெரியும். அவர் பெரிய ஆள் ஆவார் என அப்போது சொன்னேன். அந்த பட இயக்குனர் நெல்சன் சிரிப்பார். இப்ப அவர் படங்களில் கிங்ஸ்லி இல்லாமல் இல்லை
இந்த படத்தில் கவுதம் மேனனை வேற மாதிரி இருக்கிறார். அந்த டிரைலரில் அந்த பாட்டு இருக்கிறது..அவர் சும்மா விடமாட்டார்
எதிர்பார்ப்பு இல்லாமல் உதவி செய்யுங்க. மற்றவர்கள் கேரக்டர் பற்றி கவலைப்படாதீங்க. பல நிகழ்ச்சிகளில், பேட்டிகளில் அவர் என்னை பற்றி தொடர்ந்து பேசி வருகிறார். அது பற்றி என்னிடம் கேட்பார்கள். நான் அதுதான் சந்தானம் என்பேன்
எஸ் டி ஆர் 49 படத்தில் ஏன் சந்தானம் என்று கேட்கிறார்கள். இப்ப தமிழ் சினிமாவில் காமெடி குறைந்து விட்டது. ஆக்ஷன் படங்கள் அதிகம் வருது..பீல் குட், ஹேப்பி ஆன படங்கள் வரணும் .சரி அந்த படத்தில் சந்தானம் நடிப்பாரானு பலர் கேட்டார்கள். நான் போன் பண்ணினால் போதும் என்றேன். அது நடந்தது.அதேபோல் அவர் போன் செய்தால் நான் இந்த விழாவுக்கு வந்தேன். இனி தொடர்ச்சியாக காமெடி படங்களில் சந்தானம் நடிக்கணும்.இனி அவர் அதிக படங்களில் நடிப்பார்.
இவ்வாறு சிம்பு பேசினார்.