ஷாருக்கானை தொடர்ந்து சல்மான்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா | ஹன்சிகா - சோஹைல் விவாகரத்து: 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை | லாபத்தில் பங்காக சம்பளம் : ராதிகா பெருமிதம் | விஜயும் யோசித்திருப்பார்.. திரிஷாவுக்கு வாழ்த்துகள்..: பார்த்திபன் 2வது வீடியோ | மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது : சாரா அர்ஜுன் | நடிகை பாலியல் வழக்கு : கேரளா அரசு மேல்முறையீடுக்கு திலீப் உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் | நயன்தாரா, கவின் நடிக்கும் ஹாய் படத்தின் போஸ்டர் வெளியானது | என் அப்பா நினைவுக்கு வந்தார் : தாய் கிழவி வெற்றி விழாவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன் | 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது! | ரிலீஸாகி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் சித்தாரே ஜமீன் பர் |

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படவிழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிம்பு பேசியது
தில்லுக்கு துட்டு, டிடி முந்தைய பாகங்கள் என்ஜாய் செய்து பார்த்தேன். சந்தானம் என் நண்பராக இருந்தாலும்,.நான் ரசிகனாக பார்த்தேன். இதில் சந்தானம் கலக்கி இருக்கிறார்..அவர் பாடி லாங்குவேஜ் நல்லா இருக்குது..படத்தை தயாரித்த ஆர்யாவுக்கு இந்த படம் வெற்றி படமாக அமையணும். மன்மதன் காலத்திலேயே சந்தானம் ஒரு 3 பேர் டீமை வச்சு இருப்பார். அன்று முதல் இன்று வரை அந்த டீம் இருக்கிறது..அந்த உழைப்பு அப்படியே தொடர்கிறது.
ரெடின் கிங்ஸ்லியை கோலமாவு கோகிலா காலத்தில் உங்களுக்கு தெரியும். எனக்கு அவரை வேட்டை மன்னன் காலத்தில் இருந்தே தெரியும். அவர் பெரிய ஆள் ஆவார் என அப்போது சொன்னேன். அந்த பட இயக்குனர் நெல்சன் சிரிப்பார். இப்ப அவர் படங்களில் கிங்ஸ்லி இல்லாமல் இல்லை
இந்த படத்தில் கவுதம் மேனனை வேற மாதிரி இருக்கிறார். அந்த டிரைலரில் அந்த பாட்டு இருக்கிறது..அவர் சும்மா விடமாட்டார்
எதிர்பார்ப்பு இல்லாமல் உதவி செய்யுங்க. மற்றவர்கள் கேரக்டர் பற்றி கவலைப்படாதீங்க. பல நிகழ்ச்சிகளில், பேட்டிகளில் அவர் என்னை பற்றி தொடர்ந்து பேசி வருகிறார். அது பற்றி என்னிடம் கேட்பார்கள். நான் அதுதான் சந்தானம் என்பேன்
எஸ் டி ஆர் 49 படத்தில் ஏன் சந்தானம் என்று கேட்கிறார்கள். இப்ப தமிழ் சினிமாவில் காமெடி குறைந்து விட்டது. ஆக்ஷன் படங்கள் அதிகம் வருது..பீல் குட், ஹேப்பி ஆன படங்கள் வரணும் .சரி அந்த படத்தில் சந்தானம் நடிப்பாரானு பலர் கேட்டார்கள். நான் போன் பண்ணினால் போதும் என்றேன். அது நடந்தது.அதேபோல் அவர் போன் செய்தால் நான் இந்த விழாவுக்கு வந்தேன். இனி தொடர்ச்சியாக காமெடி படங்களில் சந்தானம் நடிக்கணும்.இனி அவர் அதிக படங்களில் நடிப்பார்.
இவ்வாறு சிம்பு பேசினார்.




