பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கொரோனா மூன்றாவது அலை தீவிரமாவது போல கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தோற்றம் ஏற்பட்டது.. ஆனால் இப்போது அதன் தாக்கம் குறைந்துவிட்டதால் அரசும் கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்பிற்கு தற்போது கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக திரையுலக பிரபலங்கள் ஆளாகி வருகின்றன.
அந்தவகையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நடிகர் கமல் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி மீண்டுவந்த நிலையில் தற்போது அவரது மகள் நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்.
இதுகுறித்த தகவலை அவரே வெளியிட்டுள்ளதுடன், “நண்பர்களே.. விரைவான அதேசமயம் வேடிக்கையல்லாத ஒரு அப்டேட்.. எவ்வளவோ பாதுகாப்பு விஷயங்களை கடைபிடித்து வந்தபோதும் எனக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மீண்டு வருவதற்கான சிகிச்சையில் இருக்கிறேன். சீக்கிரமே குணமாகி திரும்பும் நாளுக்காக என்னால் காத்திருக்க முடியவில்லை” என கூறியுள்ளார் ஸ்ருதிஹாசன்...