பிளாஷ்பேக் : அநேக புதுமைகள் படைத்த “ஆயிரத்தில் ஒருவன்” | முதல் முறையாக இணையும் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா! | ரீ ரிலீஸ் ஆகும் விஜய்யின் குஷி, சிவகாசி | 'குபேரா' இயக்குனருக்கு பேனா பரிசளித்த சிரஞ்சீவி | 'மாமன்' படத்தில் சுவாசிகா, பால சரவணனின் நடிப்பு: சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் டீசர் வெளியானது! | பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி கொடுக்கட்டும்! - பாடகி சின்மயி | ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திருமணத்திற்கு அழைத்த நாகார்ஜுனா | விஜய் நடித்த 'லியோ' படப் பாடல் படப்பிடிப்பு: 35 லட்சம் முறைகேடு புகார் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் பிரபல நிறுவனம் |
கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகமாக உள்ளது. மலையாள நடிகர் நடிகைகளும் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். நடிகர்கள் சுரேஷ்கோபி, மம்முட்டி, துல்கர் சல்மானை தொடர்ந்து டிகை அன்னா பென்னுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹெலன் படத்தின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர் அன்னா பென். இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான மாநில விருது பெற்றார். கும்பளாங்கி நைட்ஸ், கப்பெல்லா படங்கள் மூலம் நடிப்பு திறனை நிரூபித்தவர். தற்போது நாரதன், என்னிட்டு அவசானம், காபா, நைட் டிரைவிங் படங்களில் நடித்து வருகிறார். அன்னா பென்னும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எனக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. வாசனை இழப்பு தவிர அத்தனை அறிகுறியும் இருந்தது. பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது வீட்டுத் தனிமையில் இருக்கிறேன். மிகவும் கவனத்துடன் இரண்டு வருடங்களாக கொரோனாவிடமிருந்து தப்பி வந்தேன். இப்போது மாட்டிக் கொண்டேன். அனைவரும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருங்கள். என்று கூறியிருக்கிறார்.