இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கி உள்ள படம் குருதி ஆட்டம். இதில் அதர்வா, ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். யுவன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ராக் போர்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பலமுறை இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிப்போயிருக்கிறது.
இந்நிலையில் குருதி ஆட்டம் படத்துக்கு தடை விதிக்க கோரி ப்ளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
எங்கள் நிறுவனம் தயாரித்த இரண்டாம் குத்து என்ற படத்தின் வினியோக உரிமையை, ராக் போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், 4 கோடியே 85 லட்சத்திற்கு வாங்கியது. இதில், 2 கோடியே 85 லட்சம் ரூபாய் வழங்கிய ராக்போர்ட் நிறுவனம், மீதமுள்ள 2 கோடியை வழங்கவில்லை, இந்த நிலையில் ராக் போர்ட் தயாரிப்பில் குருதி ஆட்டம் என்ற படத்தை வெளியிட உள்ளதாக பத்திரிக்கை, விளம்பரங்கள் மூலமாக தெரிய வருகிறது. எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை வழங்காமல் குருதி ஆட்டம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தற்போது வெளியிட மாட்டோம் என தயாரிப்பு தரப்பில் இருந்து உத்தரவாதம் அளிக்கபட்டதையடுத்து, விசாரணையை ஜனவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.