பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‛கிங்டம்'. இதில் இலங்கை தமிழர்களை தவறாக சித்தரித்து இருப்பதாக கூறி தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நேற்று பல ஊர்களில் இந்தபடம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் பலர் கைதும் செய்யப்பட்டனர். இந்த படத்திற்கு பாதுகாப்பு கேட்டு படக்குழு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் இப்பட நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ‛‛தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். இந்தக்கதை கற்பனையானது என படத்தின் கார்டில் குறிப்பிட்டுள்ளோம். அதையும் மீறி மக்களின் உணர்வுகள் புண்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறோம். கிங்டம் படத்திற்கு ஆதரவு தாருங்கள்'' என தெரிவித்துள்ளனர்.