படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‛கிங்டம்'. இதில் இலங்கை தமிழர்களை தவறாக சித்தரித்து இருப்பதாக கூறி தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நேற்று பல ஊர்களில் இந்தபடம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் பலர் கைதும் செய்யப்பட்டனர். இந்த படத்திற்கு பாதுகாப்பு கேட்டு படக்குழு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் இப்பட நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ‛‛தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். இந்தக்கதை கற்பனையானது என படத்தின் கார்டில் குறிப்பிட்டுள்ளோம். அதையும் மீறி மக்களின் உணர்வுகள் புண்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறோம். கிங்டம் படத்திற்கு ஆதரவு தாருங்கள்'' என தெரிவித்துள்ளனர்.