பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள மதராஸி படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்து சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இதில், மதராஸி படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. தான் அளித்துள்ள ஒரு பேட்டியில் தனது பல அழுத்தத்தை போக்கும் அருமருந்தாக தனது பிள்ளைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
அது குறித்து அவர் கூறுகையில், ‛‛என்னுடைய மகள், இரண்டு மகன்கள் என மூன்று பிள்ளைகளையும் எனது மனைவிதான் முழுமையாக கவனித்துக் கொள்கிறார். அவருக்குத்தான் அவர்களை கவனித்துக் கொள்வதில் எவ்வளவு சிரமம் என்பது தெரியும். அதோடு நான் படப்பிடிப்பு தளங்களில் மன அழுத்தம் ஏற்பட்டு வீட்டுக்கு செல்லும்போது என்னுடைய பிள்ளைகள் தான் அந்த அழுத்தத்தை போக்கி எனக்கு பெரிய அளவில் மகிழ்ச்சியை கொடுக்கிறார்கள். அவர்களுடன் சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்து விட்டாலே என் மன அழுத்தம் எல்லாம் மாயமாகிவிடும்'' என்கிறார் சிவகார்த்திகேயன்.