சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள மதராஸி படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்து சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இதில், மதராஸி படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. தான் அளித்துள்ள ஒரு பேட்டியில் தனது பல அழுத்தத்தை போக்கும் அருமருந்தாக தனது பிள்ளைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
அது குறித்து அவர் கூறுகையில், ‛‛என்னுடைய மகள், இரண்டு மகன்கள் என மூன்று பிள்ளைகளையும் எனது மனைவிதான் முழுமையாக கவனித்துக் கொள்கிறார். அவருக்குத்தான் அவர்களை கவனித்துக் கொள்வதில் எவ்வளவு சிரமம் என்பது தெரியும். அதோடு நான் படப்பிடிப்பு தளங்களில் மன அழுத்தம் ஏற்பட்டு வீட்டுக்கு செல்லும்போது என்னுடைய பிள்ளைகள் தான் அந்த அழுத்தத்தை போக்கி எனக்கு பெரிய அளவில் மகிழ்ச்சியை கொடுக்கிறார்கள். அவர்களுடன் சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்து விட்டாலே என் மன அழுத்தம் எல்லாம் மாயமாகிவிடும்'' என்கிறார் சிவகார்த்திகேயன்.