சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

இயக்குனர் கவுதம் தின்னனூரி இயக்கத்தில் வெளியான 'ஜெர்ஸி' படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்து அவர் நடிகர் ராம் சரணை வைத்து படம் இயக்குவதாக தகவல் வெளியானது. ஆனால், அந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகராமல் கைவிடப்பட்டது. இதையடுத்து கவுதம் தற்போது விஜய் தேவரகொண்டாவை வைத்து 'கிங்டம்' படத்தை இயக்கினார். 'கிங்டம்' படம் வெளியான சில நாட்களில் ரூ. 80 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
கவுதம் தின்னனூரி அளித்த பேட்டியில் ராம் சரண் படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் கூறியதாவது," ஜெர்ஸி படத்திற்கு பிறகு ராம்சரணிடம் புதிய கதையொன்றை கூறினேன். அவருக்கு பிடித்திருந்தது. அதன் பின்னர் அந்த கதையினை முழுமையான திரைக்கதையாக எழுதினேன். அது ராம்சரணுக்கு பொருத்தமாக இருக்காது என்பதை உணர்ந்தேன். ராம்சரண் போன்ற ஒரு நட்சத்திர நடிகரை இயக்குவது ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு. அதை ஏனோ தானோ என்று இயக்க விரும்பவில்லை. இது குறித்து அவரிடமும் கூறினேன். அதன் பின்னர் இருவரும் சரியான கதை அமையும் போது இணைந்து பணிபுரிய முடிவு செய்தோம்” என தெரிவித்துள்ளார்.