என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் தியேட்டர்களை முற்றுகையிட்ட நாம் தமிழ் கட்சியினர் கைது செய்யபட்டனர்.
கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் தெலுங்கில் உருவாகி, தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளில் டப்பிங் ஆகி ரிலீஸ் செய்யப்பட்டுள்ள படம் ‛கிங்டம்'. இந்த படத்தின் கதை இலங்கையில் நடைபெறுவது போன்று உள்ளது. இந்நிலையில் இலங்கை தமிழர்களை குற்றப்பரம்பரை போல் இந்த படம் சித்தரிப்பதாகவும், அங்குள்ள மலையகத் தமிழர்களை இலங்கை தமிழர்கள் ஒடுக்கினார்கள் என்பது போன்று காட்சிகள் இருப்பதாக கூறி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்தார். 'கிங்டம்' படத்தை தமிழகத்தில் திரையிட்டால் தியேட்டர்களை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று(ஆக., 5) தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் ‛கிங்டம்' படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். சில ஊர்களில் தியேட்டர்களில் வைக்கப்பட்டிருந்த அந்த படத்தின் போஸ்டர், பேனர்களை கிழித்தனர். தியேட்டர்களில் ஏற்கனவே சில ஊர்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கோவை, ராமாநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.