என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
2025ம் ஆண்டிலும் வாராவாரம் நான்கைந்து படங்கள் சராசரியாக வெளியாவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த வாரத்துடன் வெளியான படங்களையும் சேர்த்து இந்த வருடத்தில் இதுவரை வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 150ஐக் கடந்துவிட்டது.
இந்த வாரம் ஆகஸ்ட் 8ம் தேதி முதலில் ஆறு படங்கள்தான் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது 13 படங்கள் வரை வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. “அகதி, பாய், காத்துவாக்குல ஒரு காதல், மாமரம், நாளை நமதே, நெடுமி, நிஷா, ஒரு கைதியின் நாட்குறிப்பு, ராகு கேது, ரெட் பிளவர், தங்க கோட்டை, உழவர் மகன், வானரன்” ஆகிய படங்கள் இந்த வாரம் வெளியாக உள்ளன.
இந்த வருடத்தில் இதுவரையில் ஒரே நாளில் இத்தனை படங்கள் வெளியானதில்லை. கடந்த வாரம் 7 படங்கள் வெளியான நிலையில், இந்த வாரம் 13 படங்கள் வெளியாவது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. போன வாரம் வெளியான சில படங்கள் தமிழகம் முழுவதிலுமே 10 முதல் 20 தியேட்டர்கள் வரையில்தான் திரையிடப்பட்டுள்ளன. ரசிகர்கள் வராததால் பல படங்களின் காட்சிகள் முதல் நாளிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையை எந்த சங்கமும் கண்டு கொள்ளவில்லை என்பது ஆச்சரியமான ஒன்று.