ஒரு பில்லியன் பார்வைகளைப் பெற்ற முதல் டிரைலர் ; ஸ்படைர்மேன் : பிராண்ட் நியூ டே | 'காந்தாரா' கதாநாயகியை 'அன்பாலோ' செய்த ரிஷப் ஷெட்டி | ஜூலை மாதத்திற்குத் தள்ளிப் போன 'ஜனநாயகன்' ரிலீஸ்? | சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கியாரா அத்வானி | ராம் சரணின் 41வது பிறந்தநாளில் 10 லட்சம் நன்கொடை வழங்கிய சிரஞ்சீவி | அஜித் உடன் நடித்தது மறக்க முடியாத தருணம் என்கிறார் ரெஜினா | நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை |

2025ம் ஆண்டிலும் வாராவாரம் நான்கைந்து படங்கள் சராசரியாக வெளியாவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த வாரத்துடன் வெளியான படங்களையும் சேர்த்து இந்த வருடத்தில் இதுவரை வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 150ஐக் கடந்துவிட்டது.
இந்த வாரம் ஆகஸ்ட் 8ம் தேதி முதலில் ஆறு படங்கள்தான் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது 13 படங்கள் வரை வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. “அகதி, பாய், காத்துவாக்குல ஒரு காதல், மாமரம், நாளை நமதே, நெடுமி, நிஷா, ஒரு கைதியின் நாட்குறிப்பு, ராகு கேது, ரெட் பிளவர், தங்க கோட்டை, உழவர் மகன், வானரன்” ஆகிய படங்கள் இந்த வாரம் வெளியாக உள்ளன.
இந்த வருடத்தில் இதுவரையில் ஒரே நாளில் இத்தனை படங்கள் வெளியானதில்லை. கடந்த வாரம் 7 படங்கள் வெளியான நிலையில், இந்த வாரம் 13 படங்கள் வெளியாவது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. போன வாரம் வெளியான சில படங்கள் தமிழகம் முழுவதிலுமே 10 முதல் 20 தியேட்டர்கள் வரையில்தான் திரையிடப்பட்டுள்ளன. ரசிகர்கள் வராததால் பல படங்களின் காட்சிகள் முதல் நாளிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையை எந்த சங்கமும் கண்டு கொள்ளவில்லை என்பது ஆச்சரியமான ஒன்று.