நகைச்சுவை வேடத்தில் நடிக்க சிரமப்பட்ட மீனாட்சி சவுத்ரி | இரண்டு நாளில் ரூ.51 கோடி வசூலித்த ‛பராசக்தி' : நாளை நன்றி அறிவிப்பு விழா | ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல் : தணிக்கை வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் | சிறுவயது பாலியல் துன்புறுத்தல்: 'மரியான்' படப்பிடிப்பில் அசவுகரியம்: பார்வதி 'ஓபன் டாக்' | சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்து நடிக்கபோவது சிம்புவா? துருவ் விக்ரமா? | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது | அமெரிக்காவில் ஒரு மில்லியன் பிரிமியர் வசூலை தாண்டிய சிரஞ்சீவியின் படம் | பொங்கல் விழாவை கொண்டாட வராத அட்டகத்தி தினேஷ் | வணிக நோக்கில் கமல் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை | கதை நாயகியாக நடிக்கும் வடிவுக்கரசி |

மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா 2010ல் ‛பாணா காத்தாடி' படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து 15 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வெற்றி, தோல்வியை கடந்து நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள ‛டிஎன்ஏ' படம் இந்தவாரம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் அதர்வா 'வலை' எனும் புதிய ஆக்ஷன் படத்தில் நடித்துள்ளார். இதில் முதல் முறையாக இவர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ராமேஸ்வரத்தில் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் இயக்குனர் மற்றும் நடிகர், நடிகைகள் குறித்து தகவல் வெளியாகவில்லை. விரைவில் படம் பற்றிய முழு அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




