பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

இயக்குனர் சுந்தர்.சி தமிழில் பல வருடங்களாக வெற்றி படங்களை தந்து முன்னனி இயக்குனராக வலம் வருகிறார். தற்போது 'மூக்குத்தி அம்மன்' இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் கார்த்தி புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பை இந்தாண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்க கார்த்தி கால்ஷீட் ஒதுக்கி இருந்தார். இதை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என தகவல் வெளியானது.
இந்த நிலையில் ஏற்கனவே கார்த்தி நடித்துள்ள ‛வா வாத்தியார், சர்தார் 2' ஆகிய படங்கள் இன்னும் டிஜிட்டல் வியாபாரம் நிறைவு பெறாமல் நிலுவையில் உள்ளதால் பிரின்ஸ் பிக்சர்ஸ் கார்த்தி, சுந்தர். சி படத்தை தயாரிப்பதில் இருந்து பின் வாங்கியுள்ளனர் என தமிழ் சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இதனால் இந்த படத்தை இருவருமே கைவிட்டு அடுத்த கட்டத்தை நோக்கி அவர்களின் பயணத்தை தொடர்கின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது.