பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

சென்னையில் நடந்த வீரத்தமிழச்சி படவிழாவில் பேசிய இயக்குனர் ராஜகுமாரன், தனது காதல் மனைவி, நடிகை தேவயானி குறித்து பேசியது பரபரப்பாகி உள்ளது. சுரேஷ் பாரதி இயக்கும் இந்த படத்தில் புதுமுக ஹீரோயின் சுஷ்மிதா விஜயசாந்தி ரேஞ்சுக்கு ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். அவரை தலைகீழாக தொங்கிவிட்டு, அவரை போலீஸ் அடிக்கும் காட்சிகளை கூட இயக்குனர் படமாக்கி உள்ளார்.
அந்த சீன் குறித்து பலரும் பேசியபோது மைக் பிடித்த ராஜகுமாரன், ''என் மனைவி தேவயானி புஷ்பம் மாதிரி அமைதியாக இருப்பார். ஆனால், அவர் அடித்தால் 2 டன் வெயிட். பொதுவாக பெண்கள் வீரம் மிக்கவர்கள். அடியில் பின்னி எடுத்துவிடுவார்கள். ஆனால், குடும்பம், குழந்தைகளுக்காக அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்' என்று பேசினார்.
இந்த படத்தை இயக்கிய சுரேஷ்பாரதி கொத்தனாராக பணியாற்றியவர். சினிமா மீதான ஆர்வத்தில் படிப்படிப்பாக உயர்ந்து, யாரிடமும் பணியாற்றாமல் இந்த படத்தை இயக்கி உள்ளார். விஜய் நண்பர் சஞ்சீவ் இதில் ஹீரோவாக நடிக்கிறார்.