எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

சென்னையில் நடந்த வீரத்தமிழச்சி படவிழாவில் பேசிய இயக்குனர் ராஜகுமாரன், தனது காதல் மனைவி, நடிகை தேவயானி குறித்து பேசியது பரபரப்பாகி உள்ளது. சுரேஷ் பாரதி இயக்கும் இந்த படத்தில் புதுமுக ஹீரோயின் சுஷ்மிதா விஜயசாந்தி ரேஞ்சுக்கு ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். அவரை தலைகீழாக தொங்கிவிட்டு, அவரை போலீஸ் அடிக்கும் காட்சிகளை கூட இயக்குனர் படமாக்கி உள்ளார்.
அந்த சீன் குறித்து பலரும் பேசியபோது மைக் பிடித்த ராஜகுமாரன், ''என் மனைவி தேவயானி புஷ்பம் மாதிரி அமைதியாக இருப்பார். ஆனால், அவர் அடித்தால் 2 டன் வெயிட். பொதுவாக பெண்கள் வீரம் மிக்கவர்கள். அடியில் பின்னி எடுத்துவிடுவார்கள். ஆனால், குடும்பம், குழந்தைகளுக்காக அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்' என்று பேசினார்.
இந்த படத்தை இயக்கிய சுரேஷ்பாரதி கொத்தனாராக பணியாற்றியவர். சினிமா மீதான ஆர்வத்தில் படிப்படிப்பாக உயர்ந்து, யாரிடமும் பணியாற்றாமல் இந்த படத்தை இயக்கி உள்ளார். விஜய் நண்பர் சஞ்சீவ் இதில் ஹீரோவாக நடிக்கிறார்.