என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
ஒரு படம் நன்றாக இருந்தால் அந்த படம் வெற்றி பெறும் என தெரிந்தால் அந்த படத்தை ரிலீசுக்கு சில நாட்களுக்கு முன்பே மீடியாவினர், சினிமாகாரர்களுக்கு அந்த படக்குழு போட்டு காண்பிக்கும். அந்தவகையில் ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், பர்ஹானா படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்த படமான டிஎன்ஏ படத்தின் சிறப்பு காட்சி நேற்று சென்னையில் நடந்தது.
படம் முடிந்த பின் பேசிய ஹீரோ அதர்வா, படம் பார்த்தவர்கள் பாராட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அது நெகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு காரணமான இயக்குனர், ஹீரோயின் உள்ளிட்ட படக்குழுவுக்கு நன்றி. இந்த படத்தை புதிதாக திருமணம் ஆனவர்கள், குழந்தை பெற்றெடுத்தவர்களுக்கு அர்ப்பணிக்கிறோம். காரணம், படத்தின் கதை அப்படி என்றார்.
ஹீரோயின் நிமிஷா சஜயன் பேசுகையில் ''படத்தில் நான் நடித்த அம்மா பாசம் சீன், குழந்தை சீன்களுக்கு அவ்வளவு வரவேற்பு. இந்த படத்தின் கதை, கேரக்டர், எமோஷன் அனைவரையும் சென்றடைந்துள்ளது. மகிழ்ச்சி. படம் பார்த்தவர்கள் எனக்கு விருது கிடைக்கும் என்று சொல்கிறார்கள். கூடுதல் மகிழ்ச்சி. விருதும் கிடைக்க வேண்டும். தமிழில் அடுத்தடுத்த படங்களும் கிடைக்க வேண்டும்'' என்றார்.