ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஒரு படம் நன்றாக இருந்தால் அந்த படம் வெற்றி பெறும் என தெரிந்தால் அந்த படத்தை ரிலீசுக்கு சில நாட்களுக்கு முன்பே மீடியாவினர், சினிமாகாரர்களுக்கு அந்த படக்குழு போட்டு காண்பிக்கும். அந்தவகையில் ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், பர்ஹானா படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்த படமான டிஎன்ஏ படத்தின் சிறப்பு காட்சி நேற்று சென்னையில் நடந்தது.
படம் முடிந்த பின் பேசிய ஹீரோ அதர்வா, படம் பார்த்தவர்கள் பாராட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அது நெகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு காரணமான இயக்குனர், ஹீரோயின் உள்ளிட்ட படக்குழுவுக்கு நன்றி. இந்த படத்தை புதிதாக திருமணம் ஆனவர்கள், குழந்தை பெற்றெடுத்தவர்களுக்கு அர்ப்பணிக்கிறோம். காரணம், படத்தின் கதை அப்படி என்றார்.
ஹீரோயின் நிமிஷா சஜயன் பேசுகையில் ''படத்தில் நான் நடித்த அம்மா பாசம் சீன், குழந்தை சீன்களுக்கு அவ்வளவு வரவேற்பு. இந்த படத்தின் கதை, கேரக்டர், எமோஷன் அனைவரையும் சென்றடைந்துள்ளது. மகிழ்ச்சி. படம் பார்த்தவர்கள் எனக்கு விருது கிடைக்கும் என்று சொல்கிறார்கள். கூடுதல் மகிழ்ச்சி. விருதும் கிடைக்க வேண்டும். தமிழில் அடுத்தடுத்த படங்களும் கிடைக்க வேண்டும்'' என்றார்.