'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி |

பொதுவாக, ராஜமவுலி படங்களில் இதிகாசங்கள், சனாதனம் டச் இருக்கும். அவர் படங்களில் இந்து கடவுள்கள், இந்து தர்மம் போற்றும் சீன்கள் இருக்கும். பாகுபலியில் சிவன் பாடல், ஆர்ஆர்ஆர் படத்தில் ராமர் சாயல் என பல விஷயங்களை சொல்லலாம். இப்போது மகேஷ்பாபு நடிக்கும் பெயரிடப்படாத படத்தை அவர் இயக்கி வருகிறார். படத்தில் பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா, மாதவன் உட்பட பலர் இருக்கிறார்கள்.
இந்த படத்தின் கதைப்படி உலகம் முழுக்க சென்று மூலிகை, வேர்களை தேடுபவராக ஹீரோ கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேரக்டர் அனுமனை நினைவுபடுத்துகிறது என்று கூறப்படுகிறது. ஒடிசாவில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், முக்கியமான போர்ஷனை வாரணாசி எனப்படும் காசியில் படமாக்க நினைத்தார் ராஜமவுலி. ஆனால், அங்கே படப்பிடிப்பு நடத்துவது கடினம் என்பதால், ஐதராபாத் பிலிம் சிட்டியில் அசல் காசி மாதிரியான செட்டை உருவாக்க சொல்லியிருக்கிறார். அந்த செட் 50 கோடியில் உருவாக்கப்படுகிறது. படத்தின் மிக முக்கியமான சீன்கள் அங்கே எடுக்கப்பட உள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு கென்யாவிலும் நடக்க உள்ளது என அந்த படக்குழு தெரிவிக்கிறது.