தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்த நடிகர் விஜய்! | கமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது | அம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா? விஜயலட்சுமி காட்டமான பதில் | ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து - போனி கபூர் | ‛ரஜினி 169' எப்போது ஆரம்பம் | விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | சித்தார்த் நடிக்கும் புதிய ஹிந்தி வெப் தொடர் | கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியாகும் 'தி லெஜண்ட்' பட பர்ஸ்ட் லுக் | மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திரிஷா சாமி தரிசனம் | 'டான்' வெற்றியைக் கொண்டாடிய படக்குழுவினர் |
நடிகர் விஜய்சேதுபதி நட்புக்காக எதையும் விட்டுக் கொடுப்பவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் அவரது நண்பரும், பிரபல புகைப்பட கலைஞருமான ராமச்சந்தரின் தெருக்கூத்து கலைஞர்களின் நல்வாழ்வுக்காக ஒரு காலண்டரை உருவாக்கி உள்ளார். இந்த காலண்டரில் விஜய்சேதுபதி தெருக்கூத்து கலைஞனாக வேடமிட்ட 12 படங்கள் இடம்பெறுகிறது. இந்த காலண்டர் மூலம் கிடைக்கும் வருமானம் தெருக்கூத்து கலைஞர்களின் நல்வாழ்விற்கு வழங்கப்பட இருக்கிறது.
இதுகுறித்து ராமச்சந்திரன் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பண்பாட்டு கூறுகளில் ஒன்றான தெருக்கூத்து கலையையும், கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 'தெருகூத்துக் கலைஞன்' என்ற பெயரில் ஒரு உன்னதமான பணியில் ஈடுபட திட்டமிட்டேன். இதுதொடர்பாக எனது இனிய நண்பரான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியை தொடர்பு கொண்டேன். அவர் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை பற்றி கேட்டறிந்ததும், உடனடியாக என்னுடைய புகைப்பட பாணியிலான கலைப் படைப்பிற்கு முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் தர சம்மதம் தெரிவித்தார்.
அவருக்கு இருக்கும் ஏராளமான பணிச்சுமையில் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக சிறிதும் தாமதிக்காமல் நாட்காட்டிக்கான புகைப்பட படப்பிடிப்பிற்கு நேரம் ஒதுக்கினார். அத்துடன் பல மணி நேரம் நீடிக்கக் கூடிய தெருக்கூத்து கலைஞருக்கான ஒப்பனையை பொறுமையுடன் தெருக்கூத்து கலைஞர்களை உடன் வைத்துக்கொண்டு, இந்த கலை படைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கினார். தெருக்கூத்து கலைஞர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக நண்பர் விஜய் சேதுபதி அளித்த ஊக்குவிப்பு ஒப்புயர்வற்றது. அதனை வார்த்தைகளால் விளக்கிட இயலாது. என்றார்.