தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன் மற்றும் பலர் நடித்துள்ள 'டிஎன்ஏ' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், “பரியேறும் பெருமாள்' படத்தின் கதையை நான் முதலில் சொல்லியது அதர்வாவிடம்தான். நான் முரளி சாரோட பயங்கரமான ரசிகன். 'இதயமே இதயமே'ன்னு நமக்காக பாட்டுப் பாடி அழுத ஜீவன் அவர். ஒன் சைட் லவ் அதிகமா பண்ணவர்.
அவர் பையன் ஹீரோவாயிட்டாருன்னு சொன்ன உடனே, 'பாணா காத்தாடி' படம் வந்த உடனே 'பரியேறும் பெருமாள்' படத்துல வச்சி யோசிச்ச ஹீரோ அதர்வா தான். முரளி சார் பையன், நம்மள மாதிரி கருப்பா இருப்பாரு. கதைக்குப் பொருத்தமான இருப்பாருன்னு அவரை சந்திச்சி கதை சொன்னேன். ஆனா, அவரோட பிஸில அது நடக்கல. கதை சொன்ன அன்னைக்கு ரொம்ப பீல் பண்ணேன்.
முரளி சார் பையன் ஒத்துக்கலையே, யாரை வச்சி படம் பண்றது. நம்மளப் பார்த்து அவர் டைரக்டர்னு ஏத்துக்கலையேன்னு யாரு நம்பப் போறான்னு மனைவி கிட்ட கூட பீல் பண்ணேன். ஒரு நாள் அவர் கிட்ட சொல்லுவேன்னு யோசிச்சேன். அதுக்கப்புறம் இப்பதான் சந்திக்கிறேன். கிட்டத்தட்ட ஏழு வருஷமாச்சி,'' என்றார்.
அவருக்கு அடுத்து பேச வந்த அதர்வா, “மாரி சார், இங்க வந்து 'பாம்' போட்டுப் போயிட்டாரு. 'பரதேசி' படத்துக்குப் பிறகு நிறைய விஷயம் நடந்துட்டிருந்தது. நிறைய விஷயம் மண்டைக்குள்ள சுத்திட்டிருந்தது. ஒண்ணே ஒண்ணு சொல்றேன் சார். கடந்த பத்து வருஷத்துல நான் பார்த்த சிறந்த படங்கள்ல ஒண்ணு 'பரியேறும் பெருமாள்'. அதை மிஸ் பண்ணதுல வருத்தமில்ல. கதிர் ரொம்ப நல்லா பண்ணியிருந்தாரு. வேற ஒரு ஸ்கிரிப்ட் இருந்தா சொல்லுங்க, பண்ணுவோம்,” என்றார்.