சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் |

'முண்டாசுப்பட்டி, ராட்சசன்' படங்களுக்குப் பிறகு இயக்குனர் ராம்குமார், விஷ்ணு விஷால் இணைந்துள்ள படம் 'இரண்டு வானம்'. இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
நேற்று படத்தின் நாயகன் விஷ்ணு விஷால், இயக்குனர் ராம்குமாருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “இரண்டு வானம்' கடைசி நாள் படப்பிடிப்பு, 150வது நாள் படப்பிடிப்பு. இந்தப் பயணத்தை நீங்களும் விரைவில் பெரிய திரையில் உணரப் போகிறீர்கள். தனித்துவமான சுவாரசியமான ஒன்றை மீண்டும் 'குக்' செய்துள்ளார் ராம்குமார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் கதை என்ன மாதிரியான கதை என்பது தெரியவில்லை. இருந்தாலும் அதற்காக 150 நாட்கள் படப்பிடிப்பு என்பது அதிக நாட்கள் என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். முன்னணி நடிகர், இயக்குனர், பெரிய பட்ஜெட் படம், சரித்திரப் படம் என்றால் அத்தனை நாட்கள் படப்பிடிப்பு நடத்தினாலும் பரவாயில்லை. இந்த கூட்டணிக்கு இத்தனை நாட்கள் படப்பிடிப்பு என்பது மிக அதிகமே என்பது பரவலான கருத்தாக உள்ளது.
சிக்கனமான படமெடுக்கும் சத்யஜோதி நிறுவனம் இவ்வளவு நாட்கள் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதே பெரிய விஷயம் என்கிறார்கள். படம் வந்த பிறகே அத்தனை நாட்கள் ஏன் என்ற விவரம் ரசிகர்களுக்கும் தெரிய வரும்.