தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'மாநாடு'. டைம் லூப் அடிப்படையில் கதை கொண்ட இப்படத்திற்கு ரசிகர்கள், விமர்சகர்கள், திரையுலகினர் என அனைவரும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தற்போது படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். அவர் கூறுகையில் “வெங்கட் பிரபு புத்திசாலித்தனமாக 'மாநாடு' படத்தை எழுதி, இயக்கியுள்ளார். சிலம்பரசன் அசத்தியுள்ளார். எஸ்ஜே சூர்யா மார்வலஸ். யுவனின் இசை படத்தை உயர்த்துகிறது. அனைத்து நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் அவர்களது சிறந்ததைக் காட்டியுள்ளார்கள். தமிழ் சினிமாவிற்குப் புதிய அனுபவமாகவும், சிறப்பான பொழுதுபோக்காகவும் உள்ளது,” எனப் பதிவிட்டுளளார்.
ஷங்கரின் பதிவுக்கு இயக்குனர் வெங்கட்பிரபு, சிலம்பரசன், எஸ்ஜே சூர்யா ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.