ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

இந்தியத் திரைப்படங்கள் அவ்வப்போது ஜப்பான் நாட்டிலும் வெளியாவது வழக்கம். ஹிந்தி, தெலுங்கு, தமிழ்ப் படங்கள் சிலவற்றை அங்குள்ள ஜப்பான் சினிமா ரசிகர்களும் ரசித்துப் பார்க்கிறார்கள்.
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஏ சந்திரசேகரன் மற்றும் பலர் நடிப்பில் 2021ல் வெளியான திரைப்படம் 'மாநாடு'.
'டைம் லூப்' சிக்கலில் மாட்டிக் கொண்ட கதாநாயகன் பற்றிய கதையில் மிகவும் பரபரப்பான திரைக்கதை கொண்ட இந்தப் படம் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. 100 கோடி வசூலையும் கடந்தது.
இப்படத்தை மே 2ம் தேதி ஜப்பான் நாட்டில் வெளியிடுகிறார்கள். இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “நல்ல படம் என்பது ஒரு அழகிய பறவை போல. கண்டம் கடந்தும் நேசிக்கப்படும். 'மாநாடு' தற்போது ஜப்பானில் மே மாதம் வெளியாக உள்ளது. இந்த லூப் ஹோல் திரைக்கதை ஜப்பானியர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.