ரஜினி, கமல் இணையும் படம் : இன்று பிரமோ படப்பிடிப்பு | 2026ம் ஆண்டின் முதல் வெற்றி 25வது நாளில்… | வாய்ப்பை வீணாக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' | ஓடிடியில் கடுமையாக டிரோல் செய்யப்படும் 'தி ராஜா சாப்' | ஓடிடியில் வெளியாகும் பொங்கல், சங்கராந்தி படங்கள் | சூர்யாவின் 'கருப்பு': விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'டாக்சிக்' தெலுங்கு வியாபாரம் 120 கோடி உண்மையா? | வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் |

இந்தியத் திரைப்படங்கள் அவ்வப்போது ஜப்பான் நாட்டிலும் வெளியாவது வழக்கம். ஹிந்தி, தெலுங்கு, தமிழ்ப் படங்கள் சிலவற்றை அங்குள்ள ஜப்பான் சினிமா ரசிகர்களும் ரசித்துப் பார்க்கிறார்கள்.
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஏ சந்திரசேகரன் மற்றும் பலர் நடிப்பில் 2021ல் வெளியான திரைப்படம் 'மாநாடு'.
'டைம் லூப்' சிக்கலில் மாட்டிக் கொண்ட கதாநாயகன் பற்றிய கதையில் மிகவும் பரபரப்பான திரைக்கதை கொண்ட இந்தப் படம் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. 100 கோடி வசூலையும் கடந்தது.
இப்படத்தை மே 2ம் தேதி ஜப்பான் நாட்டில் வெளியிடுகிறார்கள். இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “நல்ல படம் என்பது ஒரு அழகிய பறவை போல. கண்டம் கடந்தும் நேசிக்கப்படும். 'மாநாடு' தற்போது ஜப்பானில் மே மாதம் வெளியாக உள்ளது. இந்த லூப் ஹோல் திரைக்கதை ஜப்பானியர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.




