கார்த்தி படத்தில் இணைந்த கல்யாணி | கடந்த 40 ஆண்டுகளாக பணத்தை மதிக்காமல் இருந்தேன் : நடிகர் சசிகுமார் | ''விஜய்சேதுபதி மகன் விஜய் மாதிரி வருவார்'': வனிதா விஜயகுமார் | ஒரே நாளில் மீட்கப்பட்ட உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிராம் கணக்கு | 50 லட்சம் உதவி செய்வதாக பிரபாஸ் சொல்லவில்லை : காமெடி நடிகரின் குடும்பம் மறுப்பு | 77 லட்சம் மோசடி செய்ததாக நடிகை ஆலியா பட்டின் முன்னாள் பெண் உதவியாளர் கைது | 24 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டலீில் ரீ ரீலீஸாகும் மோகன்லாலின் ராவண பிரபு | காமெடி நடிகர் கிங்காங் மகளின் திருமணம் நடைபெற்றது! | தனியார் பேருந்துகள் ஓடாத கேரளா வெளிநாடு போல இருக்கிறது : 2018 இயக்குனர் சர்ச்சை கருத்து | 7 வருடங்களாக புறக்கணிக்கப்பட்ட பட வாய்ப்பு : விஷ்ணு விஷால் ஓபன் டாக் |
இந்தியத் திரைப்படங்கள் அவ்வப்போது ஜப்பான் நாட்டிலும் வெளியாவது வழக்கம். ஹிந்தி, தெலுங்கு, தமிழ்ப் படங்கள் சிலவற்றை அங்குள்ள ஜப்பான் சினிமா ரசிகர்களும் ரசித்துப் பார்க்கிறார்கள்.
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஏ சந்திரசேகரன் மற்றும் பலர் நடிப்பில் 2021ல் வெளியான திரைப்படம் 'மாநாடு'.
'டைம் லூப்' சிக்கலில் மாட்டிக் கொண்ட கதாநாயகன் பற்றிய கதையில் மிகவும் பரபரப்பான திரைக்கதை கொண்ட இந்தப் படம் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. 100 கோடி வசூலையும் கடந்தது.
இப்படத்தை மே 2ம் தேதி ஜப்பான் நாட்டில் வெளியிடுகிறார்கள். இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “நல்ல படம் என்பது ஒரு அழகிய பறவை போல. கண்டம் கடந்தும் நேசிக்கப்படும். 'மாநாடு' தற்போது ஜப்பானில் மே மாதம் வெளியாக உள்ளது. இந்த லூப் ஹோல் திரைக்கதை ஜப்பானியர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.