படத்திலிருந்து நீக்கபட்டது குறித்து வருத்தப்பட்ட மகிமா நம்பியார் | சமூக வலைதள கணக்கை நீக்கிய தனுஷ் பட இயக்குனர் | தனது வீட்டின் பணி பெண்ணிற்கு உதவிய அல்லு அர்ஜுன் | நித்யா மேனனுக்கு விட்டுக் கொடுத்த ஜெயம் ரவி | சிம்பு 48வது படம் : தேசிங்கு பெரியசாமியை வாழ்த்திய ரஜினி | இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது : ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சீறிய சமுத்திரக்கனி | மறைந்த பிரதமர் இந்திரா உடன் உரையாடிய கங்கனா | மாயமான கேரள கப்பலின் பின்னணியில் படம் இயக்கும் ‛2018' பட இயக்குனர் | இயக்குனராக மாறிய ஊர்வசியின் கணவர் | தடைகளை தாண்டி 'துருவ நட்சத்திரம்' வெளிவரும்: கவுதம் மேனன் அறிக்கை |
தமிழ் சினிமாவில் இப்போதுள்ள இளம் பாடகர்களில் ரசிகர்களின் பெரும் அபிமானத்தைப் பெற்றவராக சித் ஸ்ரீராம் இருக்கிறார். 'விஸ்வாசம்' படத்தில் 'கண்ணான கண்ணே' பாடலைப் பாடிய பிறகு அவரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு அவரை அந்தப் பாடல் அனைத்து ரசிகர்களிடமும் கொண்டு போய் சேர்த்தது.
தற்போது அஜித் நடித்துள்ள 'வலிமை' படத்தில் ஒரு அற்புதமான அம்மா பாடலைப் பாடியிருக்கிறார். யுவனின் இசையில், விக்னேஷ் சிவன் எழுத சித் ஸ்ரீராம் பாடியுள்ள 'நான் பார்த்த முதல் முகம் நீ…' என்ற பாடல் நேற்று வெளியிடப்பட்டது. முதல் முறை கேட்கும் போதே பாடல் ரசிக்க வைக்கிறது என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அம்மாவின் பாசம், நேசம் என அனைத்தையும் பாடலில் கொண்டு வந்திருக்கிறார் விக்னேஷ் சிவன். யுவனின் மென்மையான இசை அப்படியே நம்மைத் தாலாட்டுகிறது.
இப்பாடலைப் பற்றி பாடகர் சித் ஸ்ரீராம், “சாதனையாளர் அஜித்தின் 'வலிமை' படத்தில் இந்தப் பாடலைப் பாடியது பெருமைக்குரியது. சகோதரர் விக்னேஷ் சிவனின் உறைக்க வைக்கும் வரிகளை, சகோதரர், ஒப்பற்றவர் யுவனின் இசையில் பாடும் அனுபவம் எப்போதும் வியக்க வைக்கும். அனைத்து அம்மாக்களுக்கம் இந்தப் பாடல் காணிக்கை,” என்று தெரிவித்துள்ளார்.