‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி |
மேயாத மான் மூலம் அறிமுகமான பிரியா பவானி சங்கர் கைவசம் சுமார் 10-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. இதில் குருதியாட்டம் படம் முடிந்து ரிலீஸிற்கு தயாராகிவிட்டது. இதுதவிர ஹாஸ்டல் ருத்ரன், இந்தியன் 2 , 10 தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் நாயகி பிரியா பவானி சங்கர் தான். இந்நிலையில் மாதவன் நடித்த யாவரும் நலம், சூர்யாவின் 24 படங்களை இயக்கிய விக்ரம் குமார் அடுத்து ஒரு வெப் தொடர் இயக்குகிறார். அதில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க உள்ளார். இதில் நாயகனாக நாகசைதன்யா நடிக்க உள்ளார். விக்ரம் குமார் தற்போது நாகசைதன்யா நடிப்பில் தேங்யூ என்ற படத்தை இயக்கி வருகிறார். அது முடிந்த பின்னர் இந்த வெப் தொடர் தொடங்க உள்ளது.