மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மேயாத மான் மூலம் அறிமுகமான பிரியா பவானி சங்கர் கைவசம் சுமார் 10-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. இதில் குருதியாட்டம் படம் முடிந்து ரிலீஸிற்கு தயாராகிவிட்டது. இதுதவிர ஹாஸ்டல் ருத்ரன், இந்தியன் 2 , 10 தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் நாயகி பிரியா பவானி சங்கர் தான். இந்நிலையில் மாதவன் நடித்த யாவரும் நலம், சூர்யாவின் 24 படங்களை இயக்கிய விக்ரம் குமார் அடுத்து ஒரு வெப் தொடர் இயக்குகிறார். அதில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க உள்ளார். இதில் நாயகனாக நாகசைதன்யா நடிக்க உள்ளார். விக்ரம் குமார் தற்போது நாகசைதன்யா நடிப்பில் தேங்யூ என்ற படத்தை இயக்கி வருகிறார். அது முடிந்த பின்னர் இந்த வெப் தொடர் தொடங்க உள்ளது.